எனில் வந்து புகுந்திடுவாயா

உன் தேவைற்ற தவிர்ப்புகள் என் உயிர் தவிப்புகள் ஆகின்றன
உன் ஓய்வற்ற விழிஅசைவுகள் என் உயிர் துடிப்பு ஆகின்றன

உன் வேர்வை துளிகள் என் தாகம் குடித்திடுமோ
உன் கோர்வை மொழிகள் என் காதில் இனிக்கின்றதே

உன் நேரிய பார்வை என் இதயம் பறித்துடுமோ
உன் நேர்மையின் அன்பில் என் நேசம் பூத்திடுமோ

உன் கன்னத்துக் குழிஅது எனை உனக்குள் இழுத்திடுமோ
உன் கண்களின் கருவிழி எனை உனக்குள் மறைத்திடுமோ

உன் கூந்தல் கீற்றுகள் எனில் கவிதை புனைந்திடுமோ
உன் ஏந்தல் முகம் என் மனதில் புதைந்திடுமோ

உன் காதல் கனவு என் நேரம் கரைத்திடுமோ
உன் காதல் கதை என் கவிதை உரைத்திடுமோ

என் கனவுகள் சுமந்து உன் சிறகில் பறந்திடவா
என் நினைவுகள் மறந்து உன் உலகில் இருந்திடவா

என் தனிமைகள் துடைத்து உன் கைப்பிடியில் நடந்திடவா
என் இனிமைகள் அடைத்து உன் கைக்குள் திணித்திடவா

என் மூடிய மனதுக்குள் உனை மட்டும் நுழைத்திடவா
என் வாடிய வயதுக்குள் உனைக் கொண்டு இழைத்திடவா

என் உயிர் தேடல் உனில் வந்து முடியட்டுமே
என் இரவு கடந்து உன் அருகில் விடியட்டுமே

என் முதல் குழந்தை என வந்து சேர்ந்திடுவாயா
என் வாழ்நாள் தோழி என வந்து இணைந்திடுவாயா

என் காதல் கனிரசம் என எனில் கலந்திடுவாயா
என் மோக ஒருதுளி என என்னை உறிந்திடுவாயா

நான் நான்தான் என்ற தலைக்கனம் தகர்த்திடுவாயா
என் எனக்கானவள் என இலக்கணம் எழுதிடுவாயா

உன் மன்னவன் என் எனக்கான நாளுக்ககாக
உன் உன்னவன் உன் மலர் தாளுக்காக

என் கனவுகள் கலைத்து எனில் வந்து புகுந்திடுவாயா
என் நினைவுகள் சேர்த்து நம் வாழ்வு வகுத்திடுவாயா

எழுதியவர் : யாழினி வளன் (5-Sep-17, 11:32 am)
பார்வை : 186

மேலே