காதல் கோட்பாடு

இது முதல் காதலா
என்ற கேள்விகளோடு
துவங்குகிறது பெண்ணிடத்தில்
ஆண்களின் காதல் ....

இந்த விஷயத்தில்
எப்படியும்
ஒரு பொய்யோடுதான்
ஆரமித்தாகவேண்டும்
அவள் ,
அவளின் உண்மை காதலை ...

காதலில்
கவிதை தொடங்கி
எல்லாமும்
பொய்யாகவே புகழ்ந்து
அவளின்
அருமை பெருமை களை
உணர மறந்துபோனோம்

காதலிக்கும் போது
கவனிக்கப்படுகிற பெண்கள்
எதிரிகளானபிறகு
ஏளனப்படுவதற்கு
நம் சுயநலத்தை தவிர
வேறு எதையும் காரணமாக்கிவிட முடியாது ...

ஆண்களின் கோவங்களுக்கு
பலியான அமில காயங்களை
உடைய முகங்கள்
இன்னும் வருத்தப்படுகிறது தவிர
வன்முறையை கையாளவில்லை

பூக்களை மட்டும்
உவமை சொல்லி
போர் மங்ககைகளை
உருவாக்க
மறந்துபோனது
இந்த காதலியம்....

அண்ணன் தம்பிகளின்
பெயர்களை கூட
ரகசியமாக தான்
கைப்பேசிகளில்
கையாளவேண்டி இருக்கிறது

அவளை தொடரும் ஒரு நிழலாய்
அழுத்தம் தந்துகொண்டே இருக்கிறது
இந்த காதல் அக்கறை ....

ஒருமித்த கருத்தாய் இல்லாது
ஒருதலை கருத்தாய்
ஆண்மை தனத்திடன்
அடிமை தனப்பட்டு கிடக்கிறது

எப்போதும்
பெண்ணிய காதல்....

எழுதியவர் : (17-Sep-17, 12:09 pm)
Tanglish : kaadhal kotpaadu
பார்வை : 115

மேலே