எப்படி சாத்தியம்

அழகான உணர்வொன்று
எனக்குள்
உருவாக நீ காரணமானாய்...

அசைந்தாடும் மலரோடு
நான் பேச...
நீ சந்தர்ப்பம் தந்தாய்.....

சுகமாக சுவாசிக்கும்
வண்ணத்துப்பூச்சி...என்னுள்
வட்டமடிக்க வைத்தாய்.....

நெடுதூரம் நடந்து போய்
நிழலோடு நான் பேச...
நீ புது பாதை தந்திட்டாய்...

விரல் பார்த்து நடக்கும் என்
விடிகாலை பொழுதை...
விலகாத உன்னினைவில் ...
வாழ்ந்திட வைத்தாய்...

கருநீல மேகங்கள் தொட்டு
காதல் சொல்லும் ...
கற்பனையை என்னுள்
கசிய வைத்தாய்....

எப்படி உன்னால் முடிந்தது
இத்தனையும்?.....

எழுதியவர் : நிஷா (17-Sep-17, 2:36 pm)
Tanglish : yeppati saathiyam
பார்வை : 237

மேலே