இமைகள் இணையாமல்

விண்ணைத்தாண்டி
நீ...... வந்தால்
என்னைத்தீண்டும்
சோகம் தீருமே.....!!

நாம்
இணையாமல்
நம்
இமைகள்
ஒருபோதும்
சம்மதிக்காது
இணைந்துகொள்ள.....விரைந்து
வா.... என்னவளே.....!!

உயிரே
உயிரே.....என்றுதான்
அழைத்தேன்.....
ஏனடி
என்னுயிர்
வாங்குகிறாய்?

கலங்கரை
விளக்கில்லாத
திக்கில்
கலங்கி
நின்றேன்..... காதலே
என்
காதலே.....என்னருகே
வந்துவிடு......!!

பிரிவு
கொடுமை.....
புரியவைத்தது
நம்
தனிமை.....காதலில்
ஒருவித
சுகம் உண்டுதான்
அது
தனிமையிலும்.....
குடும்பமாய்
தாய் பிள்ளை
தந்தை
என்றானபின்பு
அது
தவறாய்
போனதடி.....உள்ளம்
வாய்திறந்து
கதறுதடி......!!!

காலை
மாலை
கண்கள்
கலங்கித்தான்
கண்டித்தேன்
கடவுளை.....ஏன்
தண்டித்தாய்
என்னை
என்று......!?!?

கண்ணெதிரே
வந்துவிடுவாய்
என்றே
என் விழிகள்
உன்
வழியை
பார்த்து நின்றேன்.....!!

மனசு
வலிக்குதடி
நெஞ்சம்
கொதிக்குதடி......
இன்பமோ
துன்பமோ
கன்னங்கள்
தானே
ஈரமாகிறது......
வீரம் கூட
ஈரம்கண்டு
துவண்டுபோனது......!!!

அன்பே
அன்பே......
அன்பே
அன்பே.........
அன்பே
அன்பே.............
அன்பே
அன்பே.....................(சுதன்)

எழுதியவர் : தம்பு (23-Sep-17, 6:07 pm)
பார்வை : 443

மேலே