காதலா கடமையா

காதலா! . . . கடமையா? . . . .

காதலில் மிதக்கிறான்
ஆனந்தத்தில் . .

கடமையில் மூழ்குகிறான்
ஆதங்கத்தில் . . .

சுண்ணத் தெளிவுக்குள்
ஓர் புழுவாய்
குழப்பத்தில் . . . .

தெளிந்து மீள்கின்றான்
தேம்பலை நீக்கி . . .

சம குவிய தூரத்தில்
நிறுத்துகின்றான்
காதலையும் .....கடமையையும் . . . .

அங்கே . .
இருவிழியின்
ஓர் மெய்பிம்பம் . . .

வாழ்க்கை ஓட்டத்தின்
ஈரெல்லைகளாய்!..
மனிதனுக்கு
காதலும் .... கடமையும் . . .

சு.உமாதேவி

எழுதியவர் : சு.உமாதேவி (30-Sep-17, 2:16 pm)
பார்வை : 116

மேலே