S UMADEVI - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : S UMADEVI |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 929 |
புள்ளி | : 202 |
முதுமை சுமை அல்ல
அவர்கள் துள்ளல்களில்
துளிர்கின்றன
முதுமையின் முதுகிலும்
இளமையின் இறகுகள்!
நீருற்றிச் செல்லும்
கடந்த கால நினைவுகளால்
அவர்கள் நிகழ்காலத்தின்
வேர்களில் தேங்கி நிற்கிறது
பசுமை!
அவர்கள் புன்னகைகள்
வரைகின்றன
பூகோளமெங்கும்
புள்ளியில்லா
பூக்கோளத்தை!
திசைகள் எட்டும்
திரையிட்டுக் கொள்கின்றன
நாணத்தில்
அவர்கள் குறும்பு கண்டு
குத்திட்ட வியர்வைக் கால்களை
மறைப்பதற்காய்!
இளமை பொழிந்து ஓய்ந்த பின்னும்
அலங்கரித்துக் கொண்டிருக்கிறது
அவர்கள் நட்பு வானை
வர்ணப்பிரிகை அடையா வானவில்!
அவர்கள் ஆடுகளத்தின்
அடித்தளமாகிப் போகிறது
தூரத்தைத் தொலைத்து
புவி புதைந்த வானம்!
சு.உமாதேவி
எட்டுக்கல் மூக்குத்தி
மூக்கினைக் குத்தி
மெய் நோய் போக்கும்
தேர்ந்த உத்தி!
நாசிதனை
மெல்லத் தொட்டு
நங்கை மனதோடு
பேசிடும் பொற்தட்டு!
கற்கள் எழுப்பிய
ஒளிரும் ஓவியம்!
கண் கூசப் பேசிடும்
கலையின் காவியம்!
பாரம்பரியம் கடத்திடும்
கடத்தி!
பார்ப்போர் மனம் குளிர
வைத்திட பொற்தீ!
பெண்மை பறைசாற்றிடும்
சின்னம்!
பண்பாட்டினைக் காத்திடும்
பொற்கிண்ணம்!
இதயம் கல்லாகியதால்
பேசிடும் பொற்பூ
உதயம் இல்லாப் பொழுததிலும்
வீசிடும் ஒளி அம்பு!
மூத்தோர் அறிவால்
எழுதிய கலையே
எழுத இயலா
அழகின் விலையே!
சு.உமாதேவி
மொட்டை மாடி
எனக்கென தனி வானத்தை
வளைத்த பூமி
மனதை மையப்புள்ளியாக்கி
மையல் கொள்கிறது!
என் எண்ணக்கீற்றுகளில்
தோய்ந்த சாயங்கள்
வானெங்கும் வரைகின்றன
என் வாழ்வியல் வரைபடத்தை!
தூரத்து மரங்களுக்கு
மாலைகளாகி மகிழ்கின்றன்
அதன் தோள் அமர்ந்த
பல் வண்ணப் பட்சிகள்!
என் பார்வைகள்
பதித்த தடம் வழியே
தனியே பிரயாணிப்பதாய்
பிரியத்துடன் வெண்ணிலவு!
என் கனவுகளின் வித்துக்கள்
முளைவிட்டு ஒளிர்கின்றன
வானத்து வீதி எங்கும்
விண்மீனின் நாற்றங்கால்களாய்!
மேனிச் சிவப்பதனை
மேல் வானெங்கும் உரசி
அந்தியை அழகாக்கி
அஸ்தமிக்கின்றன
ஆதவக் கதிர்கள்!
அனுமதி ஏதுமின்றி
ஓடும் வாகனத்தின்
ஒலி பின
எனக்குள் வெகுதூரம்
மனச் சிறகேறி
எனக்குள் வெகுதூரம்
வேர் ஊன்றி விரிகின்றன
என் எண்ணக் கிளைகள்!
என் காலடி ஓசைகளும்
நிசப்தத்தின் நீளுறக்கத்தை
நீட்டிப்பதாய்!
ஆனந்தத்தின் எல்லை ஆரம்பம் எனும்
பெயர்ப் பதாகை ஆங்கே
வரவேற்கிறது
இரு கரம் கூப்பி என்னை!
எங்கெங்கிலும்
இரவின் பனியாடைகளை
உலரவைத்துக் கொண்டிருக்கிறது
விடியல்!
பசும்வெளி எங்கும்
பனி எழுதிய
துளிப்பாக்களை
ஊஞ்சலாடி ரசித்தவாறு காற்று!
பனித் துளிகளுக்குள்
தன் பிம்பம் பதித்து
மேக உடுப்பை
சரி செய்தவாறு வானம்!
நுரை பொங்கச் சிரிக்கும்
அருவிகளின் ஆர்ப்பரிப்போ
தனக்குள் அமைதிப் பூங்கா அமைத்து
அமர வைக்கிறது மனதை!
முகடு காட்டாது வாஞ்சையாய்
நிற்கும் ம
எனக்குள் வெகுதூரம்
மனச் சிறகேறி
எனக்குள் வெகுதூரம்
வேர் ஊன்றி விரிகின்றன
என் எண்ணக் கிளைகள்!
என் காலடி ஓசைகளும்
நிசப்தத்தின் நீளுறக்கத்தை
நீட்டிப்பதாய்!
ஆனந்தத்தின் எல்லை ஆரம்பம் எனும்
பெயர்ப் பதாகை ஆங்கே
வரவேற்கிறது
இரு கரம் கூப்பி என்னை!
எங்கெங்கிலும்
இரவின் பனியாடைகளை
உலரவைத்துக் கொண்டிருக்கிறது
விடியல்!
பசும்வெளி எங்கும்
பனி எழுதிய
துளிப்பாக்களை
ஊஞ்சலாடி ரசித்தவாறு காற்று!
பனித் துளிகளுக்குள்
தன் பிம்பம் பதித்து
மேக உடுப்பை
சரி செய்தவாறு வானம்!
நுரை பொங்கச் சிரிக்கும்
அருவிகளின் ஆர்ப்பரிப்போ
தனக்குள் அமைதிப் பூங்கா அமைத்து
அமர வைக்கிறது மனதை!
முகடு காட்டாது வாஞ்சையாய்
நிற்கும் ம
பட்டாம் பூச்சி!
தன் சிறகமர்ந்த வண்ணங்களை
என் கண்ணூற்றிக்
கவிழ்த்தியதால்
சாயமேறி மிளிர்கின்றன
என் எண்ணக் கீற்றுகள்!
அதன் மென் பட்டு
மெய் தழுவிய
என் பார்வைகள்
எழுதுகின்றன
என் அழகியலின்
ஆரம்ப அத்தியாயத்தை!
காதலின்
நிச்சய ஓலையை எனக்குப்
படித்துச் சொல்வதாய
என் காதல் நெஞ்சத்தில்
சிறகடிக்கும்
பட்டாம் பூச்சிகளின் ரீங்காரம்!
என் சோகப் பொழுதுகளின்
பாரங்களை
அதன் முதுகேற்றிய
என் விழிகளுக்கு
இறகுகளாகிப் போகிறது
என் இமைகளின் சடுதி மாற்றம்!
அது வந்து சென்ற
வான் தடங்கள் எங்கும்
தேன் தெளித்து வைத்தாற் போல்
ஓர் தித்திப்பில் ஊற வைக்கின்றன
கண்களுடன் மனத்தையும்
மறுதலிக்கவைத்து!
சு.உமாதேவி
அடி தொழுகின்றேன்
ஆருயிர் எந்தன் இறைவா!
இடியென வரும் துன்பங்கள்
ஈனமாய் சீண்டும் இழிகள்
உண்டென்று நீ கண்டால்
ஊழியாய் உடனதனைப் போக்கு ...
எதிரிகள் நெஞ்சில் இல்லை
ஏகமாய் வஞ்சம் இல்லை
ஐசுவரியம் வேண்டவில்லை
ஐவளமும் நாடவில்லை....
ஒளிபடை ஓங்காரனே
ஓதியுனை சரணடைந்தேன்
ஔடதமாய் பிணியை நீக்கி
ஆட்கொண்டு என்னுள் உறைவாய்!
கவிதாயினி அமுதா பொற்கொடி
பகைமை!
காலக் கரையான்களால்
மட்க இயலா
மனதில்
புதைந்த நெகிழி!
சு.உமாதேவி
குழந்தையே தெய்வம்
குழந்தைகள்
கலப்படமில்லா அன்புக்கு
காப்புரிமை பெற்றோராய்!
அவர்களின் நட்பு வானம்
நிறப் பிரிகை
அடைவதில்லை!
அவர்களின் பார்வையில்
சாதியும் மதமும்
அம்மணமாய்!
இனம் தாண்டி
விளையும் பாசத்தின்
உற்பத்தியாளர்கள்!
கடவுளைக் கண் முன்
காட்சிப் படுத்துபவர்கள்
தங்கள் காரியங்களால்! !
சு.உமாதேவி
காதல் என்பது புரியவில்லை
உன்னை நான் பார்க்கும்வரை
சுவாசம் நிற்பதை அறிந்ததில்லை
உன் கண்கள் என் கண் வருடும்வரை
கைகள் பேசுமென அறியவில்லை
உன் கைகள் என் கை பிடிக்கும் வரை
செவிகள் மகிழ்வதை அறிந்ததில்லை
உன் கொஞ்சும் மொழிகளை கேட்கும் வரை
தென்றலின் சுகமும் அறிந்ததில்லை
உன்னுடன் திடலில் நடக்கும் வரை
மழையின் அழகு தெரியவில்லை
உன்னுடன் நானும் நனையும்வரை
நேரத்தின் அருமை புரியவில்லை
உன்னுடன் நேரம் கழிக்கும்வரை
பிரிவின் வலியும் தெரியவில்லை
உன்னை நான் பிரிந்தவரை
காலத்தின் அருமை தெரிந்ததில்லை
உன் சந்திப்பிற்கு காத்திருக்கும் வரை
#கவிதையோ கவிதை..!
உண்ணும்போதும் உறங்கும்போதும்
உடன் வருமே கவிதை..!
அமர்ந்த போதும் நடக்கும்போதும்
கரம் பிடிக்கும் கவிதை…!
சிரிக்கும் போதும் வலிக்கும் போதும்
துணையெனவே கவிதை.!
கொடுமைகளை வறுமைகளைக்
குடித்து வளரும் கவிதை..!
காற்றினிலும் மழையினிலும்
குளிர்ந்து வரும் கவிதை..!
ஆற்றினிலே படகு விட்டு
ஆடி வரும் கவிதை…!
அழகான மயிலைத் தொட்டு
தோகை விரிக்கும் கவிதை..!
இயற்கையினை காதல் கொண்டு
எழுதி வைக்கும் கவிதை..!
இறைவனவனை எழுதி எழுதி
ஆராதிக்கும் அழகு கவிதை.!
கவலையோடு வலிகளையே
கண்ணீரில் வடிக்கும் கவிதை..!
காதல் வந்தால் போதும்டா
கை நிறைக்கும் கவிதை..!
தனிமை