Ravichandran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ravichandran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Oct-2019
பார்த்தவர்கள்:  825
புள்ளி:  174

என் படைப்புகள்
Ravichandran செய்திகள்
Ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2025 8:51 pm

அவன் அலுவலகத்திற்குள் நுழைந்த போது ஃபாத்திமா சோர்ந்து போன முகத்தை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு இருந்தாள். அவன் அவளருகே சென்று அழைத்த போது அவள் தோளை அசைத்த போது அவள் அதிர்ந்து திரும்பினாள்

பெருமூச்செறிந்தவள் "ஃபூ நீதானா. எங்க அந்த ஆளுதான் வந்துட்டாரோனு பயந்துட்டேன்"

"என்ன ஆச்சு ஃபாத்திமா? சார் எங்க"

"அத ஏன் கேக்கற. நீ வருவே வருவேனு எதிர்பார்த்து ஏமாந்து போய், சரி என்ன ஆனாலும் பார்த்துடலாம்னு உள்ள வந்து பார்த்தா, ஆளு அவசர அவசரமா லேப்டாப்ப தூக்கி பைக்குள்ள சொருவிட்டு இருந்தாரு"

"என்ன ஆச்சு சார்"

"ஃபாத்திமா என் பெரியம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் சோ கொஞ்சம் எமர்ஜென்சி. நான் கிளம்பற

மேலும்

Ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2025 8:39 pm

இரவின் விழிப்பை இப்போது காண்கிறேன்

தவழும் உறைபனியாக நழுவும் மேகங்கள்

நிராதாரவான நிலவு

மின்னி மறையும் நட்சத்திரங்கள்

வளிகள் சுற்றி அலையும் வெளிகள்

அனைத்தும்  ஈரமாக பெய்த மழையில்

நனைந்த உடைகளோடு ஈரக்குடைப் பிடித்து
மோகப்புன்னகை புரிந்து என்னருகே நெருங்கி வருகின்றாய்

இமைக்க மறந்த விழிகளோடும் சுரக்க மறந்த மொழிகளோடும் தேகம் சிலிர்சிலிர்க்க உன்னை காண்கிறேன்

உடைகள் தழுவிய ஈரத்தால் வெளிப்படும் உன் அந்தரங்கள் என்னுள் எழுப்பும் காம கனலில் தேகம் அனலாகின்றது

உலகை ஈரமாக்கிய மழை ஏனோ உடலை அனலாக்கியது

உன் மெல்லுடல் பிடிக்க விரைந்த என் கரங்களில் இப்போது உன் உடை ஏந்திய உடல் இல்லை

மேலும்

Ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2025 10:51 am

சந்தித்த பின்
பரிமாறிக்கொள்ளும்
பார்வைகள்..
பேசிக்கொள்ளும்
மௌனங்கள்..
நினைவின்
தேக்கிடத்தில்
சேமிக்கத்தக்க
இத்தருணங்கள்..

இதோ
இக்கணத்தில்
சொல்லாமல்
கொள்ளாமல்
விடிந்துவிடுகிறது..

சாளரத்தை
திறந்ததும்
அறைப்பிதுங்கும்
வெளிச்சங்கள்..
இரவின் விடுதலையா?

விடிந்ததும்
விழிக்க வேண்டுமென்று
ஏன் இத்தனை நிபந்தனை?

அவசியம்
நான் எழத்தான்வேண்டுமா?

கனவில் மட்டுமே
என்னுடன்
உறவாடும்
உன் அருகாமையிலிருந்து...

மேலும்

Ravichandran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2025 9:53 pm

எளிதாகவும் மிகவும் வேடிக்கையாகவும் தான் நீ அதை செய்தாய்
உருகும் பனிக்கட்டியை கையில்
வைத்துக்கொண்டு
அதன் ஒவ்வொரு கரைதலுக்கும்
முகம் சிலிர்த்து

உருகிய பனிக்கட்டியினும்
கூடுதலாக
தவழும் உன் புன்னகையில்
குளிர்

மேலும்

Ravichandran - TPRakshitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2024 7:57 pm

கிள்ளியெறிந்திடவும் முடியாமல்
சொல்லியழுதிடவும் முடியாமல்

நெஞ்சில் நிழலாடிப்போகிறது - அவளின்
நீர்த்துப்போன நெருக்கங்கள்!

புன்னகைபூத்த சிரிப்புகள்
பூகம்பமாய் வெடிக்குது

போனவளின் புருவவிழிகள் -என்னில்
போரொன்றை தொடுக்குது!

ஈருடல் ஓருயிராய்
இரவுகளின் நீண்டகதை

இதயத்துடிப்பை நிறுத்தி - எழுதுகிறது
ஏக்கங்களின் சோகமதை

என்னவளின் சிதையை
எரிதழல் ஏந்திச்செல்ல

ஏகாந்த நினைவுமட்டும்
என்னையே எரிக்குது

என்னோடே வாழ்கின்றாள்
என்கின்ற நிதர்சனமிருக்க

மரணதேவன் வரும்வரையில்
மங்கையவள் நினைவு எதற்கு?

மேலும்

Ravichandran - Ravichandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2021 2:39 am

அப்பாவுக்கோ
நட்சத்திரம்

பொறுக்க
முடியாத
பொட்டுக்கடலை...

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.. ஹைக்கூ கவிதைகளை நீட்டிச்செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை மேலும் அது குறைபாடாக ஆகிவிடும் என்பது என் கருத்து... 12-Aug-2021 2:22 am
நல்ல உருவகம், இருந்தாலும் இன்னும் சற்று நீட்டியும் தெளிவாகவும் எழுதி பதிவிட்டால் உங்கள் பதிவு சிறந்ததாக இருக்கும் உங்களின் பதிவிற்கு என் வாழ்த்துக்கள் 11-Aug-2021 12:56 pm
Ravichandran - Ravichandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2020 6:54 pm

அந்த இருளில் மூழ்கிய படியே கார் சென்றுக் கொண்டிருந்தது.

காரை ஓட்டிக்கொண்டிருந்த தியாவிடம்

எங்க தியா போறோம்

அவள் மௌனமாக இருந்தாள்

எதாவது சர்ப்ரைஸா

அப்படித்தான் வச்சுக்கோயேன்

இரவின் அசைவில் கார் காற்றை முகத்திலறைந்தவாறே சென்றுக் கொண்டிருந்தது.

தியா குவிந்த கவனத்தோடு காரினை செலுத்திக் கொண்டிருந்தாள்.

நான் மூக்குக் கண்ணாடியை கழட்டி என் சட்டைப் பாக்கெட்டில் வைத்து கண் அயரத் தொடங்க, தவழும் தென்றலோ என் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தது.

என் எண்ண ஓட்டங்களின் முன் தியா விரிந்தாள்.

தியாவின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய தோழர்கள்.அதனால் சிறு வயதிலிருந்தே தியா எனக்கு நெருக்க

மேலும்

என் சிறு முயற்சிக்கு தங்கள் கருத்து பெரும் ஊக்கமளிக்கிறது.நன்றி. 05-Apr-2020 11:20 am
"மென்ற சுண்டலை தொண்டைக்குள் இறக்காமல் அவள் பதிலுக்காக காத்திருந்தேன்" ---அவள் வித்தியாசமானவள் என்ற கருவை சொல்ல முயன்று 75 % வெற்றி அடைந்த்திருக்கிறீர்கள் . உரையாடல்களின் யதார்த்தம் நன்றாக இருக்கிறது. வேறு விமரிசனப் பார்வையும் உண்டு. பத்திரிகையில் வரத் தக்க தரம் இருக்கிறது . வாழ்த்துக்கள் . பகிர்கிறேன் 05-Apr-2020 9:40 am
Ravichandran - Ravichandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2020 12:49 pm

உறங்கிய குளத்தில் விழுந்த

சிறிய கல் போல...

என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்

என் நினைவுகளின் நரம்புகள் வழியே

உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...

மேலும்

நன்றி, நண்பரே... 30-Mar-2020 1:50 pm
ஆஹா, அழகான வரிகள் நண்பா👏 வாழ்த்துகள்😇 30-Mar-2020 1:20 pm
Ravichandran - Ravichandran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2020 4:55 pm

நிர்வாணமான கண்ணாடி குவளையில்

உடுத்திக் கொண்டிருந்தது
பால் தன் ஆடையை...

மேலும்

நன்றி 28-Mar-2020 8:48 pm
நல்ல உவமை ! 28-Mar-2020 8:29 pm
மேலும்...
கருத்துகள்

மேலே