Ravichandran - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ravichandran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 716 |
புள்ளி | : 155 |
இன்னும் தாமதமாகிக்
கொண்டிருந்தது
நீ வரவில்லை
வாசல் வழிய
முகப்பு ஒளியையும்
வழி நெடுக
மலர்களையும்
தூவி வைத்துள்ளேன் இன்று
நீ வரவில்லை
வெயிலும்
மழையும்
குளிருமாக
காலம் உருமாறிக்
கொண்டிருந்தும்
நீ வரவில்லை
பொறுத்தது போதுமென
பதறியெழுந்து
சாலைகள்
மரங்கள்
தாவரங்களை
கடந்து
உன்னக்காண
ஓடோடி வருகிறேன்
நிலமெங்கும் இடம்
நிறைந்திருக்க
அதாளத்தில்
ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
அன்பே
மூச்சு விட முடிகின்றதா
உன்னால்?
மேகங்கள் அடைகாக்க
முயன்றன
ஓடில்லாத நிலா...
அனுதினமும்
அதிகாலை
நீ பூக்களை பறிக்க
தொடங்குகின்றாய்
உனக்காகவே பூக்களும்
மலர்ந்தனவோ
இத்தனைக்கும்
நீ பூக்களை சூடவோ
பூஜை செய்வதோ
இல்லை
அலங்காரத்திற்கும்
அர்ச்சனைக்கும்
மட்டுமா பூக்கள்
என்கிறாய்
உன் விநோதங்கள்
எனக்கு புலப்படவில்லை
என்றோ ஒருநாள்
உன் அறையிலிருந்து
எழுந்த சாம்பல்
வாசம் மூக்கை
நெருடியது
பதறி அறைக்குள்
நுழைந்தேன்
அங்கு பூக்களின்
ஒவ்வொரு இதழையும்
தீமூட்டி கொண்டிருந்தாய்
என்ன செய்கிறாய் நீ
இறந்துபோன பூக்களை
தகனம் செய்கிறேன்
பூக்கள் இறக்குமா
பைத்தியமா நீ
அவளை அடித்தேன்
சாம்பலான பூக்களையே
பார்த்தபடி இருந்தாள்
நாட்கள் கடக்க
அவள் பூக
கனவிலிருந்து
பூக்களை பறிக்க முயல்கின்றன
என் விரல்கள்
வெதுவெதுப்பான உன் முத்தத்தின்நெடி எனதறையில் குமிழும்
இரவாக நீடித்திருக்கின்றது
அன்பே
மிருதுவான நமது
தலையணைகள்
கனத்த பாறையாக இறுகி போயிருக்கின்றன
இன்று
சாம்பலான பொழுதின்
கனியும் மழை
அணையாத தீப்பிழம்பாக
உடலை சுடுகின்றது
உன் மீளாத சொற்களின்
நீர்வீழ்ச்சியில்
என் மூளையும் கரைந்ததா?
கிழிந்த போர்வைக்குள்
இல்லாத உன் உடலை
கனவெங்கும்
போர்த்தி கொள்கிறேன்
அப்பாவுக்கோ
நட்சத்திரம்
பொறுக்க
முடியாத
பொட்டுக்கடலை...
அந்த இருளில் மூழ்கிய படியே கார் சென்றுக் கொண்டிருந்தது.
காரை ஓட்டிக்கொண்டிருந்த தியாவிடம்
எங்க தியா போறோம்
அவள் மௌனமாக இருந்தாள்
எதாவது சர்ப்ரைஸா
அப்படித்தான் வச்சுக்கோயேன்
இரவின் அசைவில் கார் காற்றை முகத்திலறைந்தவாறே சென்றுக் கொண்டிருந்தது.
தியா குவிந்த கவனத்தோடு காரினை செலுத்திக் கொண்டிருந்தாள்.
நான் மூக்குக் கண்ணாடியை கழட்டி என் சட்டைப் பாக்கெட்டில் வைத்து கண் அயரத் தொடங்க, தவழும் தென்றலோ என் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தது.
என் எண்ண ஓட்டங்களின் முன் தியா விரிந்தாள்.
தியாவின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய தோழர்கள்.அதனால் சிறு வயதிலிருந்தே தியா எனக்கு நெருக்க
உறங்கிய குளத்தில் விழுந்த
சிறிய கல் போல...
என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்
என் நினைவுகளின் நரம்புகள் வழியே
உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...
நிர்வாணமான கண்ணாடி குவளையில்
உடுத்திக் கொண்டிருந்தது
பால் தன் ஆடையை...