Ravichandran - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Ravichandran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 778 |
புள்ளி | : 165 |
ப்ரியாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.மணி பர்ஸை மறந்து வீட்டில் வைத்துவிட்டு, இப்போது பேருந்து இருக்கையில் சுமார் பத்து நிமிடமாக பயணித்து கொண்டிருக்கிறாள்.பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.இல்லையென்றால் கண்டக்டர் அவளை இந்நேரம் துரத்தி இருப்பார்.எப்படியாவது அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள் போதும், சுமதியிடம் திரும்பி வருவதற்கான தொகையை பெற்றுக் கொண்டாள் ஆச்சென நினைத்தாள்
ஒவ்வொரு தடவை கண்டக்டர் டிக்கெட் கேட்கும் பொழுதும் இவளையே பார்ப்பது போலிருந்தது.அவரை தவிர்க்க இப்பொழுது காதில் ஹெட்செட் போட்டுக் கொண்டாள்.பார்வையை அதன் பின் அவர் பக்கம் முடிந்த மட்டும் திருப்பாமல் பார்த்துக் கொண்டாள்.கூட்ட
நான் சேரை நகர்த்தி போட்டு அமர்ந்து கொண்டேன்.வாசல் வெளிச்சம் வழிந்து உடலை நனைத்தது.அருகிலிருந்த பிரியாவின் முகம் அயர்ந்து தூங்கியபடி இருந்தது.தலையில் லேசாக இரத்த காயம் படிந்திருந்தது.அதில் ஒட்டிய தலைமுடி லேசாக காற்றில் ஆடியபடி இருந்தது.நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.இரண்டு நாளாக அவள் சரியாக தூங்கவில்லை என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.கால்கள் முழுவதும் கட்டுபோடப்பட்டிருந்தது.நான் சன்னல் அருகே சென்றேன்.அருகிலிருந்த மாமரத்தில் இரண்டு கிளிகள் கீச்சிட்டன.நான் அதையே பார்த்துக் கொண்டிருக்க உள்ளே அப்பொழுது தான் அம்மா காபி கொண்டு வந்தாள்
இந்தாடா பாத்து சூடா இருக்கு
அவளும் அந்த கிளிகளை வேடிக்கை
இந்த நூற்றுக்கணக்கான
க விதையை
நான் காகிதங்களில்
நட்டேன்
உணர்வுகளே
அதற்கான
நீர்
படரும் பார்வைகள்
சூரிய ஒளி
மொழிகளை ஒளிச்சேர்க்கை செய்தே
அது நாளும் வளரும்
அர்த்தபுரிந்தோரின்
இமைகள் அதன் இலைகள்
உச்சரிக்கும் உதடுகள் வேர்கள்
புன்னகை மலர்கள்
கண்ணீர் மழை
விரல்களே அதன் கிளைகள்
இதயம் நிழலாக மாறுகையில்
அன்பு தான் அதன் நிலம்
இந்நேரம் நீ
சூரியனால்
உருகிக் கொண்டிருப்பாய்
மிதமிஞ்சிய வெய்யிலின்
கோபம்
உன் உடல்
வியர்வையால் குளித்திருக்கும்
எப்படியேனும்
மரங்கள்
தலையசைக்க மறுத்த
தெருவில் தான்
நாம் சந்திப்பதாக உத்தேசம்
வெளிச்சத்தின் குறைபாடாய்
அன்று
மழையும் வந்தது
நல்ல வேளையாக
நீ குடையுடன் வந்திருந்தாய்
நானோ அளப்பரிய ஈரத்தோடும்
உன்னை பருகும் விழியோடும்
உன்னருகில் வந்தமர்ந்தேன்
மழையை சனியனென்றாய்
வழக்கமாக
என்ன ஆச்சு என்றேன்
என்னோட புது கவுன் எப்படி ஈரமாயிடுச்சு பாத்தியா
அன்பே
உன் கவலைகள்
ஏன் இவ்வளவு மலிவாக இருக்கின்றன
புலப்படாமல் விழித்தேன்
நீ ஆசையா எடுத்து கொடுத
அப்பாவுக்கோ
நட்சத்திரம்
பொறுக்க
முடியாத
பொட்டுக்கடலை...
அந்த இருளில் மூழ்கிய படியே கார் சென்றுக் கொண்டிருந்தது.
காரை ஓட்டிக்கொண்டிருந்த தியாவிடம்
எங்க தியா போறோம்
அவள் மௌனமாக இருந்தாள்
எதாவது சர்ப்ரைஸா
அப்படித்தான் வச்சுக்கோயேன்
இரவின் அசைவில் கார் காற்றை முகத்திலறைந்தவாறே சென்றுக் கொண்டிருந்தது.
தியா குவிந்த கவனத்தோடு காரினை செலுத்திக் கொண்டிருந்தாள்.
நான் மூக்குக் கண்ணாடியை கழட்டி என் சட்டைப் பாக்கெட்டில் வைத்து கண் அயரத் தொடங்க, தவழும் தென்றலோ என் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தது.
என் எண்ண ஓட்டங்களின் முன் தியா விரிந்தாள்.
தியாவின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய தோழர்கள்.அதனால் சிறு வயதிலிருந்தே தியா எனக்கு நெருக்க
உறங்கிய குளத்தில் விழுந்த
சிறிய கல் போல...
என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்
என் நினைவுகளின் நரம்புகள் வழியே
உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...
நிர்வாணமான கண்ணாடி குவளையில்
உடுத்திக் கொண்டிருந்தது
பால் தன் ஆடையை...