Ravichandran - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : Ravichandran |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 08-Oct-2019 |
| பார்த்தவர்கள் | : 843 |
| புள்ளி | : 176 |
மருத்துவமனையை அடைந்த சேகர் தான் கொண்டு வந்த பர்சை அவரிடம் கொடுத்தான்.மெல்லிய புன்னகையோடு அதைப் பெற்றுக் கொண்ட பாலு "ரொம்ப தாங்க்ஸ் சேகர் ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கியா நான் ஏடிஎம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" அவர் விடைபெற்று சென்றதும் அருகிலுள்ள நாற்காலியில் சென்றமர்ந்தான்.
வழக்கமான பரபரப்போடு மருத்துவமனை இருந்தது.கால்கள் நடந்து கடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது பின்புறம் குரலெழ திரும்பினான்.அங்கே காலையில் மயக்கம் போட்டு விழுந்த அப்பெண்ணைக் கண்டவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
பாரதியும் எதிர்பாராமல் அவனை அங்கு கண்டதும் அதிர்ந்து தான் போனாள்.காலையில் அவளைத் தேடி ஓடிவந்தவன் க
இயன்ற வரை
உன் பணிகளை
இனிதே முடித்துவா
என் அன்பே!
நான் பூக்களோடு
முகம் பொருத்தி
புன்னகையோடு
காத்திருக்கிறேன்
அடரும் இரவு
உருகி
பனித்துளிகளாய்
கரையும் வரை
நாம் பேசலாம்...
அவன் அலுவலகத்திற்குள் நுழைந்த போது ஃபாத்திமா சோர்ந்து போன முகத்தை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு இருந்தாள். அவன் அவளருகே சென்று அழைத்த போது அவள் தோளை அசைத்த போது அவள் அதிர்ந்து திரும்பினாள்
பெருமூச்செறிந்தவள் "ஃபூ நீதானா. எங்க அந்த ஆளுதான் வந்துட்டாரோனு பயந்துட்டேன்"
"என்ன ஆச்சு ஃபாத்திமா? சார் எங்க"
"அத ஏன் கேக்கற. நீ வருவே வருவேனு எதிர்பார்த்து ஏமாந்து போய், சரி என்ன ஆனாலும் பார்த்துடலாம்னு உள்ள வந்து பார்த்தா, ஆளு அவசர அவசரமா லேப்டாப்ப தூக்கி பைக்குள்ள சொருவிட்டு இருந்தாரு"
"என்ன ஆச்சு சார்"
"ஃபாத்திமா என் பெரியம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் சோ கொஞ்சம் எமர்ஜென்சி. நான் கிளம்பற
இரவின் விழிப்பை இப்போது காண்கிறேன்
தவழும் உறைபனியாக நழுவும் மேகங்கள்
நிராதாரவான நிலவு
மின்னி மறையும் நட்சத்திரங்கள்
வளிகள் சுற்றி அலையும் வெளிகள்
அனைத்தும் ஈரமாக பெய்த மழையில்
நனைந்த உடைகளோடு ஈரக்குடைப் பிடித்து
மோகப்புன்னகை புரிந்து என்னருகே நெருங்கி வருகின்றாய்
இமைக்க மறந்த விழிகளோடும் சுரக்க மறந்த மொழிகளோடும் தேகம் சிலிர்சிலிர்க்க உன்னை காண்கிறேன்
உடைகள் தழுவிய ஈரத்தால் வெளிப்படும் உன் அந்தரங்கள் என்னுள் எழுப்பும் காம கனலில் தேகம் அனலாகின்றது
உலகை ஈரமாக்கிய மழை ஏனோ உடலை அனலாக்கியது
உன் மெல்லுடல் பிடிக்க விரைந்த என் கரங்களில் இப்போது உன் உடை ஏந்திய உடல் இல்லை
கிள்ளியெறிந்திடவும் முடியாமல்
சொல்லியழுதிடவும் முடியாமல்
நெஞ்சில் நிழலாடிப்போகிறது - அவளின்
நீர்த்துப்போன நெருக்கங்கள்!
புன்னகைபூத்த சிரிப்புகள்
பூகம்பமாய் வெடிக்குது
போனவளின் புருவவிழிகள் -என்னில்
போரொன்றை தொடுக்குது!
ஈருடல் ஓருயிராய்
இரவுகளின் நீண்டகதை
இதயத்துடிப்பை நிறுத்தி - எழுதுகிறது
ஏக்கங்களின் சோகமதை
என்னவளின் சிதையை
எரிதழல் ஏந்திச்செல்ல
ஏகாந்த நினைவுமட்டும்
என்னையே எரிக்குது
என்னோடே வாழ்கின்றாள்
என்கின்ற நிதர்சனமிருக்க
மரணதேவன் வரும்வரையில்
மங்கையவள் நினைவு எதற்கு?
அப்பாவுக்கோ
நட்சத்திரம்
பொறுக்க
முடியாத
பொட்டுக்கடலை...
அந்த இருளில் மூழ்கிய படியே கார் சென்றுக் கொண்டிருந்தது.
காரை ஓட்டிக்கொண்டிருந்த தியாவிடம்
எங்க தியா போறோம்
அவள் மௌனமாக இருந்தாள்
எதாவது சர்ப்ரைஸா
அப்படித்தான் வச்சுக்கோயேன்
இரவின் அசைவில் கார் காற்றை முகத்திலறைந்தவாறே சென்றுக் கொண்டிருந்தது.
தியா குவிந்த கவனத்தோடு காரினை செலுத்திக் கொண்டிருந்தாள்.
நான் மூக்குக் கண்ணாடியை கழட்டி என் சட்டைப் பாக்கெட்டில் வைத்து கண் அயரத் தொடங்க, தவழும் தென்றலோ என் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தது.
என் எண்ண ஓட்டங்களின் முன் தியா விரிந்தாள்.
தியாவின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய தோழர்கள்.அதனால் சிறு வயதிலிருந்தே தியா எனக்கு நெருக்க
உறங்கிய குளத்தில் விழுந்த
சிறிய கல் போல...
என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்
என் நினைவுகளின் நரம்புகள் வழியே
உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...
நிர்வாணமான கண்ணாடி குவளையில்
உடுத்திக் கொண்டிருந்தது
பால் தன் ஆடையை...