TPRakshitha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : TPRakshitha |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Sep-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 6 |
ஒருத்தருக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்குன்னு ஒரு பிரபல ஸ்வீட் கடைக்குத் தனது ஃபோனில் தொடர்பு கொண்டார்...
'எனக்கு ஸ்வீட் சாப்பிட ஆசையாய் இருக்கு உங்களிடம் என்னென்ன வகை இருக்கு"-ன்னு கேட்டார்.
பதில் வந்தது...
🍪 லட்டுக்கு எண் 1-ஐ அழுத்தவும்,
🍡 பூந்திக்கு எண் 2-ஐ அழுத்தவும்,
🍧 அல்வாவுக்கு எண் 3-ஐ அழுத்தவும்,
🍚 கேசரிக்கு எண் 4-ஐ அழுத்தவும்,
🍨 குலோப்ஜாமூன் வாங்க எண் 5-ஐ அழுத்தவும்,
🍭 ஜிலேபிக்கு எண் 6-ஐ அழுத்தவும்,
🍧இவர் எண் 3-ஐ அழுத்தினார்.
பதில் வந்தது...
🍧 கோதுமை அல்வாவுக்கு எண் 1-ஐ அழுத்தவும்,
🍧 பாதாம் அல்வாவுக்கு எண் 2-ஐ அழுத்தவும்,
🍧 பால் அல்வாவுக்கு எண் 3-ஐ அழுத்தவும்,
🍧 ரவா அ
வண்டல் மண்மேலே
கொண்டல் காற்றுவீச
வலுவாக முளைத்தது மூங்கில் செடி -அத
வம்பிழுக்க வளர்ந்தது முள்ளு செடி.
முன்னேற்றம் காணும் போட்டியடி - அத
முன்மொழிந்தது முள்ளு செடி - நம்மில்
முந்தப்போவது நிச்சயம் நானடி -என்று
சொல்லி சிரிச்சது முள்ளு செடி.
சொன்ன சொல்லு சொன்னபடி
சுறுசுறுப்பா வளர்ந்தது முள்ளு செடி
ஆண்டுகள் மூன்று போனது போனபடி
மூங்கில் அங்குலம் கூட வளருளடி
இறைவா!
இது என்ன கொடுமையென்று
இம்மி அழுதது மூங்கில் செடி.
மூங்கில் செடியின் முனுமுனுப்புக்கு
முன்வந்து நின்றான் இறைவனடி
வேண்டும் உயரம் நீ வளரும்படி - உன்
வேர்களுக்கு தந்தேன் பலமடி!
வேகம் எடுத்து நீ வளர்வாய் என்றே -உன்
வேர்களை காத்தேன் இத்
அச்சானி என்றுமே
உச்சானி ஏறாது!
சிலர்
வாழ்வில் என்றும்
அச்சானிகள்!!
மறுநாள் தருகிறேன் என்று
முதலாளி சொல்கையில்
மனசு பதறுது
மாத சம்பளக்காரன்!!
அச்சானி என்றுமே
உச்சானி ஏறாது!
சிலர்
வாழ்வில் என்றும்
அச்சானிகள்!!
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?
அனேக சாலைகளில், அமைச்சர்கள் வரும் சாலைகளை தவிர, குண்டும், குழியும், பள்ளமுமாக கவனிப்பாரன்றி வாகனங்கள் தடுமாறி செல்ல வேண்டியிருக்கிறதே, இது அரசு மற்றும் மாநகராட்சி சாலைத் துறைகள் சரி செய்ய மாட்டார்களா?
நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்
சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்
சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.
மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்
வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன
இலை
காற்றாய் வந்தவளே
(ஒரு சிறு கற்பனை)
அவநம்பிக்கையில் நான் முழ்கி இருந்தேன்
அவ(ள்) நம்பிக்கையை என்னுள் ஊற்றி சென்றாள்
வாட(வோ) கை என்று நான் இருந்தேன் அவள் என்னை
வாடகை பெற்று சென்றாள்
புண் செய்வாளோ என்று நான் நினைத்தேன் - அவள்
புன்னகை பூத்து சென்றாள்
வாழ்க்கை போராட்டத்திற்க்கு நடுவில்
இடம் பிடிக்க தவித்தேன் - அந்த
வண்ண தேரோட்டத்திற்கு அவள்
வடம் பிடித்து சென்றாள்
முச்சு இறைக்க முயன்று விட்டேன் என்றேன்
முச்சு உள்ளவரை முயன்று பார் என்றாள்
எச்சில் இலையாய் என்னை நான் கடிந்தேன் - அவள்
செப்பு சிலையாய் என்னை வடித்தாள்
வெற்றி வேண்டும் என்று நான் சொன்னேன் - அதற்கு உன்னில்
வெ
நிதானமாய் சிந்தித்து
நிதர்சனமாய் சொல்லிவிடு
எது வரை வருவாய்?
என் உயிர் தோழா?
வைகறையில் கரம் பிடித்து
வசந்தம் வரை இருந்து விட்டு
புயற்காற்று மாலை வந்தால்
புறங்காட்டி செல்வாயோ?
இல்லை
சில்லறைகளை தொலைத்து விட்டு
சொந்தங்களை உதறி விட்டு
கல்லறைக்கு நான் சென்றாலும்
கரம் பிடித்து வருவாயா?
நிதானமாய் சிந்தித்து
நிதர்சனமாய் சொல்லி விடு
ஓலை குடிசையில் வாழும்
ஒற்றை தேரை நான்
உன் முயற்சியில் பேரை வாங்க - நீ நினைத்தால்
ஒய்யாரமாய் என் பின்னே வா
நம் பாதையில்
நம் வெற்றியை
கொப்பரை புத்திக்காரர்கள்
கோடி முறை மறுதலிக்கலாம்
கோபம் உன்னை தீண்டாதென்றால் - முரசு
கொட்ட என் பி
எல்லா மௌனங்களும் சம்மதம் என்று பொருள் படுவதில்லை
இதோ என் மௌனம்
என் மௌனத்தை சம்மதமாக மட்டும்
மொழி பெயர்த்து விட வேண்டாம் - இது
மென் உணர்வில் பிண்ணி பிணைந்த சோகத்தின் மெல்லிய வெளிப்பாடு
குரல் வலையை நெருக்கும் பிரச்சனைகளால் சூழப்பட்டு குரல் வெளி வராத தவிப்பு
இழப்புகளே வாழ்க்கை ஆனதால் வாய் வார்த்தையை இழந்த பரிதாபம்
கனவோடும் கற்பனையோடும் வாழ்வதால்
வார்த்தைகளில் ஏற்படும் நேர தாமதம்
இத்தனை பேசியும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்கிற ஆதங்கத்தின்
ஒலியற்ற வெளிப்பாடு
இவள் பேசி மட்டும் என்ன பலன்
என்கிற விரக்தியால் ஏற்படுகிற பேச்சற்ற நிலை
அடக்கி வைத்த அத்தனை உணர்வுக