TPRakshitha - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  TPRakshitha
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  14-Sep-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Mar-2014
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  69

என் படைப்புகள்
TPRakshitha செய்திகள்
TPRakshitha - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2025 5:56 pm

பாய்ந்திடும் நதிகள் சேர்ந்திட வேண்டும்
பஞ்சம் பாரினில் பறந்தோடிட வேண்டும்
பிஞ்சு மனங்களில் குணம்சேர வேண்டும்
நெஞ்சில் நிறைந்திடும் அன்பது வேண்டும்

கொங்கை மாந்தர்க்குக் கற்புநெறி வேண்டும்
கொடும்புலி எதிர்த்திடும் வீரமும் வேண்டும்
கொடுங்கோல் ஆட்சிகள் முடியுற வேண்டும்
கொடுமைகள் தகர்த்திடும் ஆண்மையும் வேண்டும்

தன்னலம் கருதா உள்ளமும் வேண்டும்
தாய்மடி ஒருநாள் துயிலவும் வேண்டும்
தர்மம் தழைத்தோங்கும் ஊரது வேண்டும்
தனிக்குடில் அமைத்தங்கே குடியேற வேண்டும்

விளக்கொளியாய் அறிவும் சுடர்விட வேண்டும்
விருந்தினர் மகிழ்வுறும் விருந்தோம்பல் வேண்டும்
வெள்ளாமைப் பயிரும் நஞ்சின்றிச் செழிப்புற வே

மேலும்

TPRakshitha - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2025 5:54 pm

கோலமயில் வைதேகியின் கற்பின் நிலையறியா
கோணப்புத்திக் கொண்டவனா?
கோசலையின் மைந்தனும்

சந்தேகத்"தீ" கொண்டு நானும்
சகியே! உன்னைச் சற்றும் பார்த்ததில்லை
அரியின் அவதாரம் அனைத்தும் அறிந்திருக்க
அக்னிகுண்டத்தாலே ஆற்றிடும் உண்மையென்ன?

அரியணை ஏறிட அனுதினமும்
தலையணை ஓதுவார் இருக்க
"அரி" எனை நம்பி வந்து
அசோகவனத்தில் அடைப்பட்டாயே!
அன்னையே! அதைஉணராப் பேதையா நான்?

உலை வாயை மூடிடத்தான் வழியும் உண்டு
ஊர் வாயை என்ன செய்ய?
"உத்தமி" நீ என்பதை எங்கனம் நானும்
உலகுக்கு உரக்கச் சொல்ல?

அக்கினியில் நீயும் நிற்க - ரகுநாதன்
அங்கமெல்லாம் சுட்டத் தழலை அறிந்தவரும் யாருண்டு?
அத்"தீ"யும் உன்னைத் தொடம

மேலும்

TPRakshitha - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2025 5:52 pm

இமைகளால் வெறுக்கப்பட்ட நேரம்

இருவிழியின் கருவிழியும்
இன்னுலகம் காண இயலாது
இறைவனின் படைப்பினிலே - கண்
இழந்துவிட்ட குருடன் எனக்கு

இமைகளின் இலக்கணங்கள்
இயம்புவதும் யாதென்பேன்?

இனியவை காணென்றும் - எவர்
இடரும் காணா(மல்) மூடென்றும்
இவ்வுலக மாந்தர்கெல்லாம்
இமைகளை இறைவன் தந்திருக்க

இருந்தாலும், இல்லையென்னும் - என்
இயல்பின் நிலை யாரறிவார்?

ஒளியறியாக் கண்களென்று
ஊரும் கதைப்பேசுதடி - எம்
உள்ளத்தின் சுடர்தன்னை
உணர்ந்திட்டார் யாரிங்கே?

இமைகளால் வெறுக்கப்பட்ட
இருவிழியில் நீர்கசிய
ஈரமதுக் கரிக்குதடி - இறைவா
இன்னொரு சென்மமிருந்தால்
இந்நிலையை மாற்றி எழுதிவிடு

மேலும்

TPRakshitha - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2024 6:48 pm

கொத்தனுக்கு உதவும் சித்தாள் தொடங்கி
கோபுரத்தில் வாழும் சீமாட்டி வரைக்கும்
கொட்டியே கிடக்குது ஆண், பெண் பேதம்
கோடிட்டு சொல்லுறேன் இதுவே என் வாதம்

படியளக்கும் சாமி பரமசிவன் உயர்வா?
பாதிஉடலில் நின்ற தேவி என்ன குறைவா?
பாழும் உலகம் இன்னும் நம்புது அப்படி
பார்த்ததை சொல்லுறேன் நானும் கவிப்பாடி

எட்டுமணி நேரமே எனக்கும், உனக்கும் வேலை
ஏற்றிடும் ஊதியத்தில் ஊத்துவாங்க பாலை
ஏன்? என்று கேட்டால் பெண்தானே என்பார்
எக்கில் செய்தததே என்னுடல் என்பார்

மேஸ்திரி தொடங்கி மேலாளர் பதவி
மேலினம் என்று ஆணுக்கே தருவார்
மேய்த்திடும் எருமையில் ஒன்றென எண்ணி
மேனிநோக வேலையை நம் தலையில் வைப்பார்

நீர்பூத்

மேலும்

TPRakshitha - TPRakshitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2024 8:45 pm

உலகின் முக்காலும் இந்த நீரே!
உதிரத்தின் முக்காலும் இந்த நீரே!

உயிர்களின் முதல் உணவும் நீரே!
உயிர்மையின் முதல் வரவும் நீரே!

பேதமை மறுத்து நின்றதும் நீரே!
பெய்யும் மழை துளியும் நீரே!

அகிலத்தின் ஜீவராசிகளுக்கு அமிர்தமும் நீரே!
அருவியில் குதித்து அனந்தமாவதும் நீரே!

ஆற்று படுக்கையிலே ஆடுவதும் நீரே!
ஆடிமுடிக்கையிலே சாம்பல் கலப்பதும் நீரே!

அனந்த கண்ணீரின் அன்பதுவும் நீரே!
அருமை மனிதனே அறிவாயோ நீரே!

விசும்பில் விஷம் கலந்ததும் நீரே!
இந்நிலை தொடர்ந்தால் ஏதுனக்கு நீரே!

மேலும்

TPRakshitha - TPRakshitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2024 7:57 pm

கிள்ளியெறிந்திடவும் முடியாமல்
சொல்லியழுதிடவும் முடியாமல்

நெஞ்சில் நிழலாடிப்போகிறது - அவளின்
நீர்த்துப்போன நெருக்கங்கள்!

புன்னகைபூத்த சிரிப்புகள்
பூகம்பமாய் வெடிக்குது

போனவளின் புருவவிழிகள் -என்னில்
போரொன்றை தொடுக்குது!

ஈருடல் ஓருயிராய்
இரவுகளின் நீண்டகதை

இதயத்துடிப்பை நிறுத்தி - எழுதுகிறது
ஏக்கங்களின் சோகமதை

என்னவளின் சிதையை
எரிதழல் ஏந்திச்செல்ல

ஏகாந்த நினைவுமட்டும்
என்னையே எரிக்குது

என்னோடே வாழ்கின்றாள்
என்கின்ற நிதர்சனமிருக்க

மரணதேவன் வரும்வரையில்
மங்கையவள் நினைவு எதற்கு?

மேலும்

TPRakshitha - TPRakshitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2024 7:59 pm

முகம்காணா வகையினிலே
முகநூலில் காதல் கொண்டு

முரண்பட்டு பின்னாளிலே
முறிக்கின்றது ஏராளம் உண்டு

நகமோடு சதையாக
நான்கைந்து மாதங்கள்

அகம்கசந்து அலைமோதும்
அவர்வாழ்வின் நாட்டங்கள்

மெய்தழுவி ஒருசிலநாள்
மெய்யாக இருந்து

மைவிழியாள் மைவிழியின்
மைகரைந்து போக

கைகழுவி வேறொன்றின்
கரங்கள் பற்றிக்கொள்ள

மரணம்வரை செல்லுமென
மனதுவைத்தக் காதல்

மண்ணோடு மண்ணாக
மரணித்து மாண்டுவிட

காதலெது வரையென்று
காதலர்க்கேக் தெரியும்

மேலும்

TPRakshitha - TPRakshitha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2024 8:01 pm

உத்தமி அவள்
உள்ளாடும் காதலை

ஊரறிய ஒருநாளும்
உரக்க சொன்னதில்லை

உரைப்பதற்கும் நேரமது
உதவியதாக தெரியவில்லை

உறங்காமல் உழைகின்றாள்
உறவுகளின் நலம் விட்டதில்லை

கள்ளமகள் அவள் காதலை
கண்களிலே அறிகின்றேன்

காலமெல்லாம் கண்மணிக்கு
காவலாக விழைகின்றேன்

முடிச்சுப்போட்டு வந்த காதலிது
மூச்சின் இறுதிவரை தொடர்ந்திடுமே!

முழுமை பெற்ற காதலெல்லாம்
முதுமை வரை வந்திடுமே

மேலும்

TPRakshitha - TPRakshitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2023 6:22 am

அச்சானி என்றுமே
உச்சானி ஏறாது!
சிலர்
வாழ்வில் என்றும்
அச்சானிகள்!!

மேலும்

Palani Rajan யாருக்கு வெட்கம்? எதற்கு வெட்கம்? அது விடுபட்டு போனது. அதை மாண்புடன் சொல்லி இருக்கலாம். இப்படி கேடு கெட்ட விமர்சனம் செய்யும் நீர் தான் ஐயா வெட்க பட வேண்டும். நான் அல்ல. கவிதை குறித்து மட்டும் விமர்சனம் செய்யுங்கள். அதை தவிர்த்து வேறு எதையும் நோண்டி விமர்சனம் செய்ய உமக்கு உரிமை இல்லை. உமது வயதுக்கு அது சரியும் அல்ல. மீறி சீண்டினால் தக்க பதிலடி தருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. உனையல்லாம் எப்படி காவல் துறையில்? நினைத்தாலே வெட்க கேடு. 04-Jul-2023 12:32 pm
தம்பி தியாகராஜா இதெல்லாம் ஹைகூ இல்லை. எதற்கு ஹைகூ இனியத் தமிழ் குறளில் எழுதி தழை வளர்ப்பாய் தமிழா. உம்முடைய ஊர் பிறந்த தேதி காணோம் ஆணின் புகைப்படம் போட்டு தியாக ராஜன் என்றும் பெயற்சூட்டிக் கொண்டும் ஆணா பெண்ணா என்று சொல்ல ஏன் வெட்கம். என்ன குறைபாடு உமக்கு 04-Jul-2023 7:07 am
TPRakshitha - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2023 7:07 pm

ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?

மேலும்

வலிமயானவர், தூய்மையானவர் 22-Sep-2023 11:00 pm
தழுவுதல் 16-Sep-2023 5:08 pm
அரவணைப்பது 21-Aug-2023 5:04 am
தழுவுதல் புணர்ச்சி கட்டிக்கொள்ளுதல் 05-Aug-2023 10:40 am
TPRakshitha - இரா இராமச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2015 4:01 pm

அனேக சாலைகளில், அமைச்சர்கள் வரும் சாலைகளை தவிர, குண்டும், குழியும், பள்ளமுமாக கவனிப்பாரன்றி வாகனங்கள் தடுமாறி செல்ல வேண்டியிருக்கிறதே, இது அரசு மற்றும் மாநகராட்சி சாலைத் துறைகள் சரி செய்ய மாட்டார்களா?

மேலும்

மானமில்லா நாய்களை அறிவாளி enbathjt அவனைத் தேர்வு செய்து பதவியில் உட்கார vaiththathjr யார்.. நல்லவருக்கு ஒட்டுப்பொடர் தெருவாசிகளை உடுப்பேத்துங்கள்.. நடக்கும் 01-Jul-2023 4:06 pm
செய்வார்கள் அவர்கள் வந்தால் மட்டும் 13-Mar-2015 10:31 pm
கட்டாயம் சரி செய்வார்கள் அடுத்த தேர்தல் நெருங்கும் தருணத்தில். 13-Mar-2015 8:43 pm
TPRakshitha - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2014 1:54 pm

நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்

சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்

சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.

மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்

வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன

இலை

மேலும்

நன்றி சகோதரி... 18-May-2015 7:18 am
உங்கள் இலக்கிய நயம் இன்னும் சிறப்படைய வாழ்த்துகிறேன் 13-May-2015 4:57 pm
நன்றி Maruthanayagam அவர்களே 14-Jan-2015 8:46 am
வாழ்த்துக்கள் உங்கள் சிறந்த எண்ணத்திற்கு என் வாழ்த்துகளும் பொங்கல் தின நல் வாழ்த்துகளும்... 13-Jan-2015 11:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (7)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
pravee004

pravee004

Chennai

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே