போ நீ போ

உன்னிடம் சொல்லிய வார்த்தை
அதை காக்க - என் யுகம்
பாதுகாத்தேன்...
காமம் சில சமயம் எட்டிப்பார்த்தும்
காதல் பூ மட்டும் உதிரவில்லை...
கோபங்கள் இருந்தும்
தாபங்கள் மறந்ததில்லை
விரகங்கள் அவ்வப்போது நிகழ்ந்தும்
பாசத்திற்கு குறைவில்லை
சிறு புழு போல் சிலநேரம் குலைந்தும்
கிளியாய் சில நேரம் கூண்டில் அடைந்தும்
குருவியாய் பல நேரம் திரிந்தும்
காதல் வளர்ந்தது..
தோள்கள் வருடலை தேட
மனம் காதலில் திளைத்திட
மடிகள் தலையணை ஆகிட
காதல் வலம் வந்தது.
அன்பு குறையவில்லை
பாசம் மாறவில்லை
நேசம் மறக்கவில்லை
இருந்தும்
பிரிவு வந்தது எப்போது??
சண்டைகள் பல வந்தும்
சமாதானம் தேடிய உதடுகள்
இன்று
மௌனம் தரிப்பது ஏன்??
கண்களை மோதி கொண்ட காதல்
இன்று
நேர் நோக்க மறுப்பது ஏன்??
துணையாய் இருந்த மனம்
தனிமை வாசலில் விட்டது ஏன்??
போ காதலே போ
விடைகள் மட்டும் தந்துவிடு
விடை பெற்று செல்கிறேன்.

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (19-Oct-17, 6:49 pm)
Tanglish : po nee po
பார்வை : 447

மேலே