கண்ணீர் துளி

கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!

என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்!

பாரழுத கண்ணீர் பனிக் கடலாய்க் கிடக்க, இது
யாரழுத கண்ணீர் அலை நடுவே மிதக்கிறது.?


இது -
சீதை அழுததெனச் செப்பியது ராமகதை!
தமிழ் என்னும்
கோதை அழுததெனக் கூறவில்லை பூமியிதை!

கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!

என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்!

எழுதியவர் : சஜா (16-Nov-17, 2:10 am)
சேர்த்தது : சஜா
Tanglish : kanneer thuli
பார்வை : 321

மேலே