சஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சஜா
இடம்:  வவுனியா,இலங்கை
பிறந்த தேதி :  12-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Nov-2017
பார்த்தவர்கள்:  439
புள்ளி:  136

என்னைப் பற்றி...

மன்னிக்கவும்!!!

நான் இப்பொழுதுதான் தமிழில் எழுதிப்பழகுகிறேன். என் தமிழில் உள்ள எழுத்து பிழைகளை மன்னிக்கவும்.

என் படைப்புகள்
சஜா செய்திகள்
சஜா - சஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2017 2:48 am

அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்பா கேட்டார்,
“மகளே!.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்?”

மகள்.... கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள் ..

“நூல்தாம்ப்பா பட்டத்தின் சுதந்திரத்தை தடுத்துக் கொண்டிருக்கிறது ”.

அப்பா சொன்னார், “இல்லை மகளே நூல்தான் அதைப் பறக்க வச்சிகிட்டு இருக்கு”

மகள் சிரித்தாள். அப்பா ஒரு கத்தரியால் நூலை வெட்டினார். முதலில் பட்டம் விடுபட்டு தாறுமாறாகப் பறந்தது. கொஞ்ச நேரத்தில், சற்று தூரம் தள்ளி கீழே போய் விழுந்தது.

“ஒழுக்கம் இப்படியானதுதான் மகளே!. அது உன்னை இழுத்துப் பிடித்திருப்பதாக நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

அதிலிருந்து அறுத்துக்

மேலும்

அண்ணா அருமை.அவசியமான கருத்து..... 24-Nov-2017 10:15 am
நன்றி நட்பு உங்கள் வாழ்த்துக்கள் எப்போதும் கிடைக்க 23-Nov-2017 4:03 pm
இப்படி ஒரு கருத்தை எப்படி எழுதினிர்கள்???!!!!..... என்னே! சிந்தனை வளம்!!!! சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளை உணர்ந்து உள்ளம் தெளிந்தேன் உங்கள் பதிவால்..... மிக்க நன்றி தோழரே....... அடிப்படை அறிவை அவசியம் தாருங்கள் அடுத்த தலைமுறைக்கு........ 23-Nov-2017 3:20 pm
மிக மிக சந்தோஷம் தோழா 23-Nov-2017 2:27 pm
சஜா - சஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2017 2:14 am

தேடித் தொலைந்து போனேன்
எதிர்பார்த்து ஏமாந்து போனேன்
நேசித்து நொடிந்து போனேன்
என்னடா வாழ்க்கை என்றேன்
இனி எப்போதும் இறக்க துணிந்தேன்

போதி மரம் தேவையில்லை
நான் புத்தனாக போவதுமில்லை

துறப்பதற்கு ஒன்றும் இல்லை

துறவுகொள்ள போவதில் அர்த்தமில்லை

சிறுபிள்ளையாய் அழுது பார்த்தேன்
கேட்டது எதையும் தரவில்லை



அன்பாய் அழைத்து பார்த்தேன்
அவன் என்றும் வரவேயில்லை

கடன் வாங்கி காணிக்கைப் போட்டேன்
கண் திறந்து பார்க்கவே இல்லை

கண்ணீர் சிந்தி கல்லும் கரைந்திட
கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்
கருணையின்றி தருகிறான் இடர் !

மேலும்

செம 02-Dec-2017 12:33 pm
Really natpu 23-Nov-2017 1:20 am
நன்றிகள் நட்பு 23-Nov-2017 1:19 am
Sema feelings really superb 22-Nov-2017 7:33 pm
சஜா அளித்த படைப்பை (public) MALARVIZHI மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Nov-2017 11:12 am

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
அடகு வைத்து காசு கேட்காமல் !,

பார்வை இல்லை இருந்தும்
நேர்வழியில் செல்ல கையில்
நீண்ட கம்பியொன்று ,
உலகத்தில் தனக்கு தெரிந்த நிறம்
கருப்பு ஒன்றுதான் என்று
மீண்டும் சொல்லும்
கறுப்புக் கண்ணாடி கண்களில்,
சொற்ப நேரமே நின்று செல்லும்
பேருந்துகளில் கூட நடை தளராமல்
கைகளில் பேனா , பென்சில்களை ஏந்தி
விற்று செல்லும் அவரை
பார்த்தால் மறுக்காமல் ஏதேனும்
வாங்கிகொள்ளுங்கள் நீங்களும் .
கை

மேலும்

நன்றி நட்பு 23-Nov-2017 1:17 am
அன்புத் தங்கையே நன்றி 23-Nov-2017 1:17 am
உணர்கிறேன் உங்கள் உள்ள உணர்வை. 22-Nov-2017 9:14 am
அண்ணா...அருமை 22-Nov-2017 8:02 am
சஜா - சஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2017 8:33 pm

எந்தக் கடலின் வறட்சியில்
எந்த மேகக் குளிர்ச்சியில்
சொந்தமில்லா நில மகளுக்கு
வெள்ளிக்கொலுசு மாட்டுகிறாய்!

மலைகள் நனைக்கிறாய்!
மரங்கள் துளிர்க்கிறாய்!
அருவிகள் பெருக்கி
ஆறாய்ப் பாய்கிறாய்!

வெள்ளமென்று சொல்லிக்
கொள்ளாமல் - வீதிஉலா
தெருக்கூத்து மேவுகிறாய்!

நிஜமல்ல நீ!
பொய்த்து ஒளிகிறாய்!
பெய்து ஓய்கிறாய்!
பருவகாலம் மாற்றுகிறாய்!
தேவை நீ என்கையில்
துளி வீழாமல்-
பரிதவிக்கவைத்துப் பின்
உதவுவார்ப் போல்
பாசாங்கு செய்கிறாய்!

நிஜமல்ல
மழை என்று
உன் சரிதைச்
சொல்லுகின்றேன்!
நிரூபிப்பதாய் இருந்தால்
பதில் சொல்லிப் போ!
கன மழையாய் அல்ல
கண மழையாய்!

தாய்ப் பால்
வேண்டிடும்
சிசுக்களாய்
உன் தயாளத்திற்

மேலும்

மகிழ்ச்சி சகோ தாராளமாக அழைக்கலாம் 23-Nov-2017 4:02 pm
தம்பி அருமையா இருக்கு, வரிகளும் வருணனைகளும் அற்புதம். (உங்களை தம்பி என்று அழைக்கலாமா.........?) 23-Nov-2017 3:27 pm
நன்றி நட்பு 19-Nov-2017 9:32 am
மிக அழகான வெளிப்பாடு தோழா 19-Nov-2017 6:52 am
சஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 3:03 am

தூண்டிலில் சிக்கிய மீனாய் சிக்கி தவிக்கிறேன்....
என் இதயத்தில் உன் பார்வை பட்ட நாள்முதல்.

மேலும்

ம்ம்... அருமை 16-Nov-2017 12:52 pm
சஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 1:43 am

என் விழி
எப்போ உன்னிரு
கண்களையும்
பார்த்ததோ
அன்று முதல்
இன்று வரை
எனக்கு காதல்
தினம் தான்
எனக்கு இந்த
காதலர் தினமொன்றும்
புதுமையில்லையடா
நீ தூவிச் சென்ற
பார்வை நிமிடத்திலிருந்து
நான் கொண்டாடுகின்றேன்
கண்ணீர் தெளித்து
மங்களகரமாக என்னோட
காதல் தினத்தை!!!

மேலும்

அருமையான வரிகள்... 16-Nov-2017 10:13 pm
பார்வைகளே போதும் இந்த ஜென்ம வாழ்க்கையை உள்ளம் கடந்து போக.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Nov-2017 6:06 pm
ஆஹா.... அருமை நட்பே... 16-Nov-2017 1:07 pm
சஜா - சஜா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Nov-2017 3:00 pm

நல்ல நட்பு!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

'நல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய்.' (அறிவிப்பவர் : அபூ மூஸா அல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.)

தனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ

மேலும்

நல்ல நண்பன் மரணம் வரை ஊன்று கோல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Nov-2017 6:50 pm
நண்பரே, நல்ல கட்டுரைப் படித்தேன் ஆன்மாவிற்கு அருமருந்தாய் ஆனால் இது கவிதை அல்லவே! 10-Nov-2017 9:16 am
சஜா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2017 6:09 pm

வணக்கம்

ஊடகம் ..
இந்த ஊடகம் என்றால் என்ன ?

இன்றைய ஊடகத் துறையின் நிலை தான் என்ன?

பொதுவாக ஊடகத் துறை என்றாலே பலரும் முகம் சுழிக்கக் காரணம் என்ன?

இந்த மீடியாக்களால் தான் இவ்வளவு பிரச்சனை ,விபச்சார மீடியாக்கள்.
இப்படி ஊடகங்களை மக்கள் ஏன் வெறுக்கிறார்கள் இது யாருடைய தவறு .?

ஊடகத் துறை என்பது நீங்கள் நினைப்பது போல் பொழுதுபோக்கு மட்டும் அல்ல
பொறுப்பான துறையும் தான் .

தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எதுவென்றாலும் உங்களை
சிரிக்கவோ சிந்திக்கவோ
வைத்த படி தான் நகர்கிறது .
நீங்கள் தான்
சிந்திக்க வேண்டிய நேரத்தில் சிரித்து
சிரிக்க வேண்டிய நேரத்தில் சிந்திக்கிறீர்கள் .

மேலும்

மிகத்தெளிவான ஊடகங்களை பற்றியும் ஊடகவியலாளர் படும் பாடுகள் பற்றியும் உண்மைச் செய்திகளை வாசகர்கள் மதிப்பதில்லை என்றும் வெளியிட்டிருந்த ஆதங்கம் புரிகிறது ஏதோ இந்த விளம்பர உலகத்தில் மாயைகளை நம்பி விளம்பரங்களை நம்பி அட்டைப்படத்தை நம்பி படிக்கின்ற வாசகர்களின் மத்தியில் உண்மைகள் எப்போதும் உறங்கி தான் இருக்கின்றன நன்றி 11-Jul-2021 6:25 pm
இன்றைய ஊடகங்கள்... பொறுப்பு உடன் செயல்படுகிறது 25-Apr-2019 10:27 pm
உண்மைதான் கயல்விழி நட்பே. மனிதனின் மூளை இருக்கிறதே, அது சமயத்தில் குழம்பிப் போகும்போது இப்படிப்பட்ட தாறுமாறான எண்ணங்கள் அலட்சிய போக்கு தோன்றத் தான் செய்யும். அனால் ஒன்று இவர்களுக்கு புரிவதில்லை, அதே ஊடகங்கள் அவர்களது அன்றாட தினத்தை நடத்துகின்றன.தங்கள் செய்திகளின் மூலமாக. எதையும் ஆராய்ந்து பார்த்து விட்டுத்தான் கருத்துக் கூற வேண்டும். இந்தக் கடமை ஒவ்வொரு மனிதனின் உரிமைக்கு முன்பிலேயே இருக்கிறது. எங்களுக்கும் சேர்த்து நீங்கள் சாடியதற்கு நன்றி. 19-Sep-2018 10:50 pm
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையான விஷயங்கள் ...ஆனால் இதை இந்த சமூகம் ...ஏற்க மறுக்கிறதே ...போராட்டம் என்ற ஒன்றை தேடி தான் நாம் அனைத்தும் பெற வேண்டிய கட்டாயம் ..இப்பொழுது ....... 26-Jul-2018 12:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

இனியன்

இனியன்

அதிராம்பட்டினம், thanjavur
HSHameed

HSHameed

Thiruvarur
பவித்ரா ரெகுநாதன்

பவித்ரா ரெகுநாதன்

மணவாளக்குறிச்சி,
புகழ்விழி

புகழ்விழி

கும்பகோணம்

இவர் பின்தொடர்பவர்கள் (28)

shanthi-raji

shanthi-raji

tamilnadu
மலர்91

மலர்91

தமிழகம்
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (27)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஸமாஸாதிர்

ஸமாஸாதிர்

மதவாச்சி

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே