கற்பனையில் மட்டும் தாய்
தாயின் பாசத்திற்கும்
பாட்டியின் பாசத்திற்கும்
இடையில் சிக்கி
தவித்தது
ஓர் குழந்தை!
தாய்
தன் குழந்தையின்
பாசத்திற்கு ஏங்கிய போது…
பாட்டி
தன் உலகமே
அந்த குழந்தை
என்றிந்தாள்…
தன் குழந்தையின் நலம்..
தன் குடும்பத்தின் நிம்மதி…
கருதி
விட்டுக்கொடுத்தாள்
தாய்மை உணர்வை…
கட்டுபடுத்திக் கொண்டாள்
ஏக்கத்தை..
அந்த தாய்..
குழந்தையை
மார்போடு அனைத்துக் கொள்ளாமல்
தூரம் நின்று ரசித்து சிரித்தாள்..
கற்பனையில் வாழ்ந்தாள்..
தன்னையே ஏம்மாற்றி கொள்வதை
அறியாத
அந்த தாய்…