கல்வியில் பதவிகள் சூடு

துன்பங்கள் எமக்கிங்கு நூறு - வாழ
நாதியில்லை வழியுமில்லை வேறு
மழையும் காற்றும் வெயிலும்
மக்கள் பசியும் நோவும்
எங்களது சமூகத்தின் கூறு - மனிதா
எம்வாழ்வு சிறத்தற்கு வழியுண்டா கூறு
மகளே நீயெந்தன் அங்கம் - உலவும்
ஆசைகள் ஆவல்கள் எங்கும்
வாழ்வு சிறக்கும் நன்னாள்
வந்திடும் எமக்கு உன்னால்
கற்றோர்க்கு சிறப்புண்டு தங்கம் - உந்தன்
கல்விதான் கரைசேர்க்கும் என்றும்
வாழ்வதற்கு எமக்கில்லை கூடு - வயிற்றுப்
பசிபோக்க படுகின்றேன் பாடு
கவலை வேண்டாம் கண்மணியே
காரியம் நடக்கும் செல்மகளே
கல்வியில் பதவிகள் சூடு - உன்னைக்
காலமெல்லாம் போற்றெட்டும் நாடு
ஆக்கம்
அஷ்ரப் அலி