ஐவரையுஞ் சாரார் பகைபோற் சலித்து – சிறுபஞ்ச மூலம் 41
நேரிசை வெண்பா
பூவாதாள் பூப்புப் புறங்பொடுத் தாளிலிங்கி
ஓவாதாள் கோலம் ஒருபொழுதுங் - காவாதாள்
யாரார் பிறர்மனையாள் உள்ளிட்டிவ் வைவரையுஞ்
சாரார் பகைபோற் சலித்து. 41
– சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
அறிவுடையார்,
பருவமடையாத கன்னி, மாதவிடாய் நீங்கியவள், தவமுடையவள்,
ஒருபொழுதும் அலங்காரம் செய்தல் நீங்காத கற்பைக் காவாத பரத்தை,
யார்யாரோ பிறர்க்குரிய மனையாள் உள்ளிட்ட ஐவரையும், பகைவரைப்போல் வெறுத்து சேரார்.
கருத்துரை:
பூவாத கன்னியையும், பூப்பு நீங்கிய விருத்தமாதையும் தவப்பெண்ணையும் வேசியையும் பிறர் மனையாளையும் அறிவுடையார் சேரமாட்டார்.

