வேர்க்கடலை

மண்ணில் புதைந்து,
வேரில் உயிர்த்து,
பூமியில் வளர்ந்து,
செடியை பிரித்து,
தனியாய் நின்றபோது...

தேகத்தை உடைத்து,
உயிரை மட்டும் எடுத்துச் செல்வதில்...

உண்டோ நியாயம்...!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (16-Nov-17, 7:29 pm)
பார்வை : 1203

மேலே