வர்ணம் என்பது உண்மையில் நிறமா

பெற்ற பிள்ளைக்கு,
தாய்ப்பால் கொடுத்த அன்னை...
புத்தியில் ஜாதிப்பாலை,
தினமும் ஊட்டலாமோ...!?
ஆணும்... பெண்ணும்...
நிகரென வாழும் நாட்டில்,
ஜாதி என்னும் நஞ்சு,
நாள்தோறும் நடமாடலாமோ..!?
வறுமைக்குத் தன்
வாழ்வில் இடமளித்ததால்,
குலம் தாழ்ந்ததா..?
மனத்திற்கு பகட்டான
வாழ்வு கொடுத்ததால்
குலம் உயர்ந்ததா..?
உண்ணும் உணவில்
மாற்றம் உண்டோ..!
உடுத்தும் உடையில்
மாற்றம் உண்டோ...!!
எதைக் கொண்டு தரம் பிரித்தீர்கள்..?
சாதிகள் இல்லையடி பாப்பா - என்று
பாடம் சொல்லும் பள்ளிகளே – சாதி
வேர்களை மண்ணில்,
ஆழ்ப்படுத்தும் வேதனை ஏனோ...
கைகட்டி வேலை செய்ய,
உயர்ந்தவர் என்று
எவருமில்லாத போது...!
சாதிக்கு மட்டும்,
வண்ணம் தீட்டி...
மேடை ஏற்றலாமோ...!?
ஜாதி என்பது வெறும்
வாய் வார்த்தையைக்கூட,
நம்மிடம் வலம் வரவேண்டாம்...!
ஜாதியை அகற்றப் போராடிய
பாரதியின் பாடல்களும்...
பெரியாரின் முழக்கங்களும்
ஓய்ந்து விட வேண்டாமே...!!
ஜாதிக்கு எதிரான
என் வார்த்தைகளும்...
அவர்களின் வார்த்தைகளை,
நினைவு படுத்தட்டுமே...!
ஜாதியை அகற்றியே
புதிய சரித்திரம் படைப்போம்...!
மனித மனங்களின்று,
ஜாதி எனும் பிணி,
விலகி நிற்கட்டும் எப்பொழுதும்...!
Written by JERRY