காமம்
அவனுக்கும்
அவளுக்கும் இடையில்
வெட்கம் புகப் பார்த்தது!
இருவர்க்கும் நடுவே
இடைவெளி
இல்லாததால்
புக முடியாமல்
புறம் பார்த்தது!
* அவள் நெற்றி
முடிக்கீற்றும்
முந்தானையும்
ஒன்றுதான்!
இரண்டும்
இருக்க வேண்டிய
இடத்தைவிட
விழும்போதுதான் அழகு!
அவன்
வியர்வைத் துளிகளால்
பூஜிக்கிறான்!
அவள்
விழுந்த மலர்களால்
சேவிக்கிறாள்!
அங்கே – ஒரு
வெப்ப அபிஷேகம்
வெற்றிகரமாகிறது!
அந்த
கண்கோர்த்தலா
கைத்தீண்டலா
கட்டிப்பிடிப்பா
காமச்சூடா
எது தொடங்கியதோ…
தெரியாமலேயே
ஒரு
கட்டில் போர்
கடந்தேறியது!
இது இல்லையென்றால்
எதுவும் இல்லையாம்!
இருக்கும்போது மட்டும்
என்ன வாழ்கிறதாம் !
அவள் செல்லச் சீண்டலில்
அவன் வெட்கிச் சிரிக்கிறான்!
கவிதையை எப்படி
முற்றுப்புள்ளியோ
ஆச்சர்யப்புள்ளியோ
முடித்து வைக்கிறதோ..
அது போல
முடித்து வைக்கத்தான்
அவன் முத்தப்புள்ளி இட்டான்…
புள்ளி
இன்னொரு கோலமானது………!