போதை புத்தகம்
குலேபகாவலி எனும் திரைப்படத்தில் வரும் "சேராமல் போனால்" என்ற பாடலின் மெட்டிற்கு எழுதிய வரிகள்....
*ஆண்*
வளர்பிறை நீயங்கே
தேய்பிறை நானிங்கே
அருகினில் வா அணங்கே
முழுமதியாவோம்....!
உனை இரு கையில் அள்ள
நம்முயிர் இணையுது மெல்ல
இதை என்னவென்று சொல்ல
உடல்களின் தவமோ...?
நெடுநேரமாய்
தொடுவானம் போல்
கவிவரிகள்...!
நீ தொடும் நேரத்தில்
பொழிகின்றதே
அடைமழை போல்...!
மெய்யிரண்டும் கோர்த்து
நெய்வோமே நம்மை...!
உயிர் வேர்வரை வேர்த்து
விதைப்போமே நம்மை..!
சிறு எய்யாமை கூட
இதில் சுகம்தானே
உண்மை உண்மை...!
என்னன்பே....!
*பெண்*
பெண்ணை படைத்து
ஆணும் படைத்து
காதல் கொடுத்தான்
தேவனல்லவா...!
பூக்கள் படைத்து
தேனும் கொடுத்து
வண்டை படைத்தான்
மேலும் சொல்லவா...!
*ஆண்*
மெல்ல திறந்தால்
அள்ளிக் கொடுக்கும்
போதை புத்தகம்
நீயல்லவா...!
உன்னை திறந்து
உள்ளே நுழைந்து
உன்னில் கலந்து
மோட்சம் பெறவா...!
*பெண்*
நீரும் நெருப்பை
அணைத்தால் நெருப்பும்
அணைந்து போகுமல்லவா..
அணைக்கும் நீரும் நானடா...!
*ஆண்*
நீயும் நானும்
எதிரெதிர் துருவம்
இருந்தும் ஈர்த்துக் கொள்கிறோம்
காதல் காந்தமல்லவா..!
கோபிநாதன் பச்சையப்பன்....