ஒருதலை

வகுப்பறை மேஜையில்
எழுதிய அவள் பெயர்,
தூரம் இருந்து ரசித்த
அவள் உரையாடல்கள்,
அவள் அழுவதை பார்க்க
முடியாமல் அழுத நேரங்கள்,
அவள் போவதை தெரிந்து
வழிதவறிய என் பாதைகள்,
அவள் வராத நாட்களில்
தோன்றும் பெரும் கனம்,
வேறாரும் அவளை நெருங்கினால்
உண்டாகும் கோபம்,
அவளறியாமல் அவளோடு
நடைபோட்ட பயணங்கள்,
இறுதிவரை அவள் கண்களை
தாண்டி போகாத என் வார்த்தைகள்...
இன்னும் இதயத்தில் இருக்கிறது,
ஒரு ரனமாய்,
அவள் நினைவுகளோடு
என் காதல்....

எழுதியவர் : சுகன் dhana (23-Jan-18, 8:17 pm)
சேர்த்தது : sugan dhana
Tanglish : oruthalai
பார்வை : 290

மேலே