உங்களுக்காக
என் சோம்பல்
என் அன்னை வந்து விடியலைத் தர போர்வைக்குள் உறங்குகிறது... .
என் மறதி
என் மேல் அக்கறை கொண்டோரின்
அன்புச் சண்டைகளை அள்ளித் தருகிறது.....
என் கவலை
என் நெருக்கமான உறவுகளின் உண்மையை காட்டுகிறது. ..
என் மெளனம்
உங்களில் ஒருவரை அதிகம் பேச வைக்கிறது....
என் வெகுளித்தனம்
என்னை வேடிக்கை பார்க்கும்
உங்களை சிரிக்க வைக்கிறது....
என் பொறுமை
உங்களை வழியனுப்ப
வழி விடுகிறது .....
எல்லாம் தெரிந்த ஞானியாய்
எதையும் செய்யும் வீரனாய்
நான் மாற வேண்டாம்....
இதுவரை எப்படியோ
அப்படியே இருந்து விடுகிறேன்...
உங்களுக்காக.....