காதல் நிலவே

நீரில் விழ்ந்த நிலவின் பிம்பம் போல
என் மனதில் விழ்ந்தாய்,
உன் விழியால் ஈர்த்தாய்,
என்னை முழுவதும் சாய்த்தாய்,
இதயத்தில் காதலாய் மலர்ந்தாய்,
நீராழியை ஆளும் நிலவை போல
உன் வருகையும் நினைவும்
என்னில் பெறும் மாற்றம் செய்யுதே,
நிலவில் நீரை பற்றிய ஆய்வை போல
ஓர் முடிவு தெரியாமல் நான் திணறிபோனேன்,
உன் பிறைகள் கண்டு நான் மயங்கிபோனேன்,
நிலவை சுற்றும் செய்மதியை போல
உன்னை சுற்றியே வருகிறேன் பெண்ணே,
கடல்நீரும் நிலவும் கொண்ட
காதல் தூரம் போதும் பெண்ணே,
குளிரும் பனியுமாய்
காதல் கொள்ள பதில்சொல் பெண்ணே.........