ஹைக்கூ

எல்லா ஊரிலும் ஒரு வெண்புறா
தென்னையிலிருந்து விடுபடும்
பிறை நிலா

*

நிலாவின் கீழ்
எப்போதும் இருக்கும்
சில நினைவுகள்

*

வனத்தில் வசந்த கூடுகள்
ஆஹா ..
வானத்தில் பௌர்ணமிக்கூடு

*
அந்தப்புரத்திலும் மேன்மாடத்திலும்
இரவெல்லாம் உலவுகிறாள்
முகில்கோட்டை ராணி

*

அமாவாசை இரவு
எங்கு தவிக்கிறதோ
பிள்ளை நிலா ........? ..........(மீள்)

*

கவித்தாசபாபதி

எழுதியவர் : கவித்தாசபாபதி (3-Feb-18, 1:45 am)
Tanglish : haikkoo
பார்வை : 139

மேலே