கால எந்திரம்

கால எந்திரம்
கடவுள்களை மாற்றியது.....
பூசை தொழுகை செபமென்று
வழிபாடுகளை மாற்றியது.......
பூணூல் குல்லா சிலுவையென அடையாளங்களை மாற்றியது
ஆனாலும்....
மனைவியின் பிரசவத்தில்
நாத்திகனும்-
ஆத்திகனாகிறான்
மதவெறிக்கு
பலியாகும்போது
ஆத்திகனும்-
நாத்திகனாகிறான்....!

அழ. இரஜினிகாந்தன்

எழுதியவர் : (20-Feb-18, 8:42 am)
சேர்த்தது : RAJINI1968
பார்வை : 55

மேலே