சேதி கேளடி கண்ணம்மா

சேலைகட்டி
பஞ்சுமிட்டாய் சேலைகட்டி நடந்து போகும் கண்ணம்மா
ஒரு சேதி சொல்லனும் சேந்து போவோம் நில்லம்மா.....
அப்படி இப்படி முறைச்சு பாக்குற கோபமா
ஆசையிருந்தும்
என்மேல ஆசையிருந்தும் நடிக்கிறியே ஏனம்மா...!!!

என்ன வேணும் சொல்லடி
என் உசுரகூட கேளுடி
கோபம் எதுக்கு வேணான்டி
கொஞ்சி பேசலாம் வாயேண்டி
சேலைகட்டி
பஞ்சுமிட்டாய் சேலைகட்டி நடந்து போகும் கண்ணம்மா
ஒரு சேதி சொல்லனும் சேந்து போவோம் நில்லம்மா
மார்கழி மாச குளிருல
மல்லாக்க படுத்தும் தூங்கலை
ராத்திரி முழுதும் உன் நெனப்புல
சூடான என்உடம்பு ஆறல...

சேலைகட்டி
பஞ்சுமிட்டாய் சேலைகட்டி நடந்து போகும் கண்ணம்மா
ஒரு சேதி சொல்லனும் சேந்து போவோம் நில்லம்மா....

எழுதியவர் : தங்க பாண்டியன் (28-Feb-18, 11:35 am)
பார்வை : 136

மேலே