கல்வி அழியாத செல்வம்

‘இள­மை­யில் கல்’ என்­பதை உணர்ந்­தி­ருக்க வேண்­டும். இள­வ­ய­தில் படிப்­பது நம் மன­தில் அப்­ப­டியே பசு மரத்­தாணி போல் பதிந்­து­வி­டும் என்­பதை புரிந்து கொள்ள வேண்­டும்.

கல்­வி­தான் ஒரு­வனை அறி­வாளி ஆக்­கு­கி­றது. அறி­யாமை எனும் இருட்­டைக் கல்வி எனும் ஒளி­தான் போக்­கு­கி­றது. நல்ல புத்­த­கங்­கள் அறிவு கண்­ணைத் திறக்­கும் ஒரு திற­வு­கோல். கல்வி ஒரு­வனை மட்­டும் மேம்­ப­டுத்­தாது. அவ­னைச் சார்ந்­த­வர்­க­ளை­யும், சமு­தா­யத்­தை­யும், ஏன் நாட்­டை­யுமே அது உயர்த்த உத­வும்.

கல்­வி­யின் பெரு­மை­யைப் பழம் பாடல் ஒன்று அழ­கா­கப் பேசும். கல்வி என்­பது அழி­யாத செல்­வம். அது காலத்­தால் அழி­யாது. கள்­வ­ரா­லும் கவர முடி­யா­தது. வெள்­ளத்­தால் போகாது. தீயி­னா­லும் வேகாது. கல்­விச் செல்­வம் தவிர ஏனைய செல்­வங்­க­ளைக் கள்­வர்­கள் திரு­டிச் சென்­று­விட முடி­யும்; வெள்­ளம் அடித்­துக் கொண்டு போகும். தீ தனது செந்­நிற ஜூவா­லை­யால் பொசுக்க முடி­யும்.

ஒரு முறை பார­தி­யார் எட்­ட­ய­புர அரச சபை­யில் இருந்து தன் ஊருக்­குத் திரும்­பிச் சென்­றார். அர­சர் கொடுத்த பணத்­தில் நல்ல நல்ல நுால்­களை வாங்கி வந்­தார். பார­தி­யின் மனைவி செல்­லம்மா தன் கண­வர் தமக்­குப் பிடித்­த­தாய் வாங்கி வரு­வார் என்று ஆசை­யாக வாச­லில் நின்­ற­வாறு அவ­ரது வரவை எதிர்­நோக்­கிப் பார்த்­தி­ருந்­தார்.

ஆனால், தன் கண­வரோ புத்­த­கங்­க­ளாக வாங்கி வந்­த­தைக் கண்டு சினம் கொள்­கி­றாள். சினம் கொண்ட மனை­வியை பார­தி­யார் சமா­தா­னப்­ப­டுத்­து­கி­றார்.

கல்­விச் செல்­வம் அள்ள அள்ள குறை­யாது. கொடுத்­தா­லும் குறை­யாது. எடுத்­தா­லும் குறை­யாது.

‘‘தொட்­ட­னைத்து ஊறும் மணற்­கேணி மாந்­தர்க்­குக்

கற்­ற­னைத்து ஊறும் அறிவு’’

இறைக்க இறைக்­கச் சுரக்­கும் நீர் போல அறி­வா­னது கொடுக்­கக் கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்­கும். பெற்­றோர்­க­ளுக்கு ஒரு வார்த்தை! உங்­கள் குழந்­தைக்­குக் கல்­வி­யின் அவ­சி­யத்­தைப் புரிய வையுங்­கள். கற்­ப­தில் விருப்­பத்தை உண்­டாக்­குங்­கள். ‘‘ஒரு பெண் கல்வி கற்­றால் அது அவ­ளது குடும்­பத்­துக்கே கற்­பிப்­ப­து­போல்’’ என்­பார் பார­தி­தா­சன்.

கல்­வி­தான் எது நல்­லது? எது கெட்­டது? எனப் பகுத்­த­றி­யக் கற்­றுக் கொடுக்­கும். ஒரு நாண­யத்­துக்கு இரு பக்­கம் உண்டு என்­ப­தை­யும் உணர வைக்­கும். எந்த விஷ­யத்­தை­யும் உற்று நோக்­கக் கற்­றுக் கொடுக்­கும். சம­யோ­கி­த­மாக நடந்து கொள்­ள­வும் கல்­வி­ய­றிவே கை கொடுக்­கி­றது என்­பதை ஒரு சிறு­கதை மூலம் பார்க்­க­லாம்.

அர­சன் ஒரு­வன் அதி­கா­லை­யில் எழுந்து உப்­ப­ரி­கை­யில் நின்­றான். அப்­போது அந்த வழியே சென்ற ஓர் இளை­ஞன் அர­ச­னின் பார்­வை­யில் பட்­டான். பிறகு அர­சன் திரும்­பு­கை­யில் படி இடித்து நெற்­றி­யில் ரத்­தம் வந்­தது. இத­னால் சினம்­கொண்ட மன்­னன், ‘‘பிடித்து வாருங்­கள் அந்த இளை­ஞனை’’ என்று கட்­ட­ளை­யிட்­டார்.

அந்த இளை­ஞனோ, ‘‘என் மேல் சுமத்­திய குற்­றம் என்ன?’’ என்று துணிந்து அர­ச­ரி­டம் கேட்­டான். அர­சரோ, ‘‘இன்று காலை­யில் உன் முகத்­தில் விழித்­த­தால் எனக்கு இந்த கதி ஏற்­பட்­டது. எனவே நீ உயி­ரோடு இருக்­கக்­கூ­டாது’’ என்­றான். அந்த இளை­ஞனோ இதைக் கேட்டு சிரித்­தான்.

‘‘ஏன் சிரிக்­கி­றாய்?’’ என்­றான் மன்­னன்.

‘‘அரசே! மன்­னிக்க வேண்­டும்! என் முகத்­தில் தாங்­கள் விழித்­த­தால் உங்­க­ளுக்கு ஏற்­பட்­டது சின்ன காயம். ஆனால் என் கதி­யைப் பாருங்­கள். அர­ச­ரின் தரி­ச­னம் கிடைத்­த­தால் என் உயிர் போகப் போகி­றதே! இதை நினைத்­தேன். யாரு­டைய முகம் அதிர்ஷ்­ட­மா­னது என எண்­ணியே சிரித்­தேன்’’ என்­றான்.

அந்த இளை­ஞன் தன்­னு­டைய சாமர்த்­தி­யப் பேச்­சால் உயிர் தப்­பி­னான். இத­னைத் தந்­தது கல்­வி­ய­றி­வு­தானே!

நம் குழந்தை படிப்­பில் சிறந்து விளங்­கி­னால் பெற்­றோர்­கள் அவர்­களை ஊக்­கு­விக்க வேண்­டும். ஏதே­னும் பரி­சு­கள் கொடுத்து அவர்­களை சந்­தோ­ஷப்­ப­டுத்த வேண்­டும். குறை­வான மதிப்­பெண் வாங்­கி­யி­ருந்­தால் பொறு­மை­யாக அவர்­க­ளது தவ­று­க­ளைச் சுட்­டிக்­காட்ட வேண்­டும். குழந்­தை­கள் கண்­ணா­டி­யைப் போல் ‘ஹேண்­டில் வித் கேர்’ என்­பது போல அவர்­களை ஜாக்­கி­ர­தை­யாக கையாள வேண்­டும்.

கூடு­மா­ன­வரை உங்­கள் குழந்­தை­கள் படிக்­கும்­போது அவர்­கள் அரு­கில் இருங்­கள். தொலைக்­காட்­சியை மூடி­வி­டு­வது உத்­த­மம். பெரி­யோர்­கள் இருக்­கும் வீட்­டில் அவர்­கள் புரிந்து கொள்­ளும் வகை­யில் எடுத்­து­ரைத்து புரிய வைக்­க­லாம். இல்­லை­யேல் புத்­த­கங்­களை வாங்கி வந்து படிக்க சொல்­லுங்­கள். எல்­லோ­ருமே படிக்­கும் சூழலை உரு­வாக்­கி­னால் குழந்­தை­க­ளும் விருப்­பத்­தோடு படிக்­கும். கல்­வி­தான் வாழ்க்­கையை வழி நடத்­திச் செல்­கி­றது என்­பதை அவர்­க­ளுக்கு சொல்­லித் தர வேண்­டும். பாது­காப்­பான வாழ்க்­கையை வழங்­கு­வ­தும் கல்­வி­தான்.

படிப்­பது என்­பது பாடப் புத்­த­கத்தை மட்­டும் குறிப்­பது அல்ல; நல்ல நல்ல நீதிக் கதை­கள், அறி­ஞர் பெரு­மக்­க­ளின் வாழ்க்கை வர­லாறு புத்­த­கங்­க­ளைப் படிக்­கும் பழக்­கத்தை நாம்­தான் குழந்­தை­க­ளுக்கு பழக்க வேண்­டும். வாசிக்­கும் பழக்­கம் ஒரு­வ­ரது மனதை வளப்­ப­டுத்­தும். வாசிப்­பின் மூலம் பல சாத­னை­கள் உண்­டா­னதை வர­லாறு நமக்­குச் சொல்­கி­றது.

உங்­கள் குழந்­தை­க­ளின் பிறந்த நாள் என்­றால், அவர்­க­ளுக்கு புத்­த­கங்­க­ளைப் பரி­சா­கத் தந்து படிக்­கும் பழக்த்தை வலி­யு­றுத்­துங்­கள். வெறும் கல்வி மட்­டும்­தான் படிப்பு அல்ல. இசை, நாட்­டி­யம், ஓவி­யம், விளை­யாட்டு என பல துறை­க­ளில் ஆர்­வம் உள்ள துறை­க­ளில் அவர்­க­ளைச் சேர்த்து ஊக்­கப்­ப­டுத்­துங்­கள். புத்­தக வாசிப்­பால் உயர்ந்­த­வர்­கள் பலர் உண்டு.

அப்­படி ஊக்­கப்­ப­டுத்­தி­ய­தால்­தான் ஒரு சச்­சின், ஒரு விஸ்­வ­நாத் ஆனந்த் எனச் சாத­னை­யா­ளர்­க­ளைப் பார்க்க முடி­கி­றது. அறி­வுள்­ள­வர்­க­ளால் தான் வாழ்க்­கையை அமை­தி­யான முறை­யில் நடத்த முடி­யும். எந்­த­வி­தச் சிக்­க­லை­யும் தீர்­கக் முடி­யும்.

கற்­றோர்க்கு எங்கு சென்­றா­லும் சிறப்­பு­தான். கல்­வி­யில் பெரி­ய­வன் கம்­பன் அல்­லவா! அவ­ருக்கு பணி­யா­ளாக சோழ மன்­னரே இருந்­தார் என்­பதை அறி­யும்­போது கல்­வி­யின் பெருமை புரி­கி­றது அல்­லவா!

எளிய குடும்­பத்­தில் பிறந்து தனது பரந்த கல்வி அறி­வால் உல­கையே வியக்க வைத்து, அதன் மூலம் நமது பாரத நாட்­டின் குடி­ய­ர­சுத் தலை­வ­ரான ‘அப்­துல்­க­லாம்’ கல்­வி­யின் பெரு­மையை நமக்கு உணர்த்­தும் மாம­னி­த­ராக உயர்ந்து நிற்­கி­றார். எளி­மை­யி­லும் அவரை மிஞ்ச ஒரு­வ­ரும் இல்லை. கலா­மின் கல்வி அறி­வில் தன் மனதை பறி­கொ­டுத்த நகைச்­சுவை நடி­கர் விவேக் தான் நடிக்­கும் படங்­க­ளில் எல்­லாம் அவ­ரைப் பற்றி புகழ்ந்து பேசு­வதை வழக்­க­மாக கொண்­டி­ருப்­ப­தைப் பார்க்க முடி­கி­றது.

‘இனிப்பு இருக்­கும் இடத்தை நாடிச் செல்­லும் எறும்­பு­க­ளைப் போல, தேனி­ருக்­கும் இடத்தை நாடிச் செல்­லும் வண்­டைப் போல’ நல்ல நுால்­கள் இருக்­கும் இடத்தை நாடி மாண­வர்­கள் செல்ல வேண்­டும். அயல்­நா­டு­க­ளில் படிக்­கும் பழக்­கத்தை குழந்­தைப் பரு­வத்­தி­லி­ருந்தே ஊக்­கு­விக்­கின்­ற­னர். குழந்தை பிறந்த சில நாட்­க­ளில் அர­சாங்­கமே ‘கிப்ட் பேக்’ என்று சொல்லி புத்­த­கங்­க­ளைப் பரி­சாக தரு­வது வழக்­கம். பிறந்த குழந்­தை­க­யின் பெய­ரில் நுாலக உறுப்­பி­னர் அட்­டை­யை­யும் வாங்­கிக் கொள்­ள­லாம்.

குழந்தை வளர வளர படிக்­கும் ஆர்­வத்தை அதி­க­ரிக்­கும் வகை­யில் ஓர் அட்­டை­யில் படித்த புத்­த­கத்­தின் எண்­ணிக்­கையை குறித்து வைத்­துப் பரி­சு­க­ளைத் தந்து உற்­சா­கப்­ப­டுத்­து­வர்.

நுால­கத்­தில் ஒரு பகு­தி­யில் ‘கதை சொல்­லும் வகுப்­பும்’ நடை­பெ­றும். குழந்­தை­க­ளு­டன் அவர்­க­ளது பெற்­றோர்­க­ளும் அதில் கலந்து கொள்­ள­லாம்.

மேலை நாடு­க­ளில் இருந்து எதை எதையோ பின்­பற்­றும் நாம், ஆனால் அவ­னி­டம் அதற்­குண்­டான பணம் இல்லை. அவன் தந்­தையோ ஏழை. அவ­ரால் எப்­படி இதற்­கெல்­லாம் செலவு செய்ய முடி­யும்.

அவனோ புத்­த­கம் படிக்­கும் ஆசை­யில் வெகு­துா­ரம் சென்று பலரை கெஞ்சி கேட்டு புத்­த­கங்­கள் வாங்கி வரு­வான்.

ஒரு­நாள் அவன், ‘அமெ­ரிக்க ஜனா­தி­பதி வாஷிங்­டன்’ பற்­றிய புத்­த­கத்­தைப் படித்து வந்­தான். உறக்­கம் வரவே, புத்­த­கத்தை ஜன்­னல் ஓரத்­தில் வைத்­து­விட்­டான். அன்று பெய்த மழை­யில் அப்­புத்­த­கம் நனைந்­து­விட்­டது. ‘‘ஐயோ! இதன் உரி­மை­யா­ள­ருக்கு என்ன பதில் சொல்­வது?’’ என்று தவித்­தான்.

பின் ‘‘ஐயோ! இந்­தப் புத்­த­கம் எனது அஜாக்­கி­ர­தை­யால் நனைந்­து­விட்­டது. தயவு செய்து என்னை மன்­னித்து விடுங்­கள்.’’ என்று கேட்­டுக் கொண்­டான். ஆனால் அவரோ ‘‘அதெல்­லாம் முடி­யாது. இப்­புத்­த­கத்­திற்­கான விலையை நீ தர வேண்­டும்’’ என்­றார். ‘‘ஐயா! என்­னி­டம் பணம் இல்லை’’ என்­றான். ‘‘அப்­ப­டி­யா­னால் நீ என் வய­லில் மூன்று நாட்­கள் வேலை செய்ய வேண்­டும்’’ என்­றார்.

‘‘சரி! அப்­ப­டியே செய்­கி­றேன். ஆனால் தாங்­கள் இந்­தப் புத்­த­கத்தை எனக்கே தர வேண்­டும்’’ என்று கேட்­டுக் கொண்டு வேலை­யைச் செய்து முடித்­து­விட்டு அப்­புத்­த­கத்­தைப் பெற்­றுச் சென்­றான்.

இப்­ப­டிப் புத்­த­கத்தை வாங்­கிப் படித்த அச்­சி­று­வன்­தான் பிற்­கா­லத்­தில் அமெ­ரிக்­கா­வின் ஜனா­தி­ப­தி­யா­கத் திகழ்ந்­தார். ஆம்! அடி­மைத்­த­ளையை அறுத்­தெ­றிந்த ஆபி­ர­காம்­லிங்­கன்­தான் அச்­சி­று­வன்.

அவ­னது நுால­றிவு அவனை எவ்­வ­ளவு உயர்ந்த பத­வி­யில் வைத்­தி­ருந்­தது பார்த்­தீர்­களா?

அந்­நிய நாட்­டில் மட்­டும்­தான் இப்­ப­டிப்­பட்ட சிறு­வர்­கள் இருந்­த­னரா? நம் நாட்­டி­லும் பலர் உண்டு. நம் தமி­ழ­கத்­தில் புதுக்­கோட்டை மாவட்­டத்­தைச் சார்ந்த ஒரு சிறு­வ­னும் புத்­த­கத்­தின் மேல் பிரி­யம் கொண்­ட­வன். தந்தை பள்­ளிக்­கூ­டம் செல்ல பஸ்­ஸுக்கு தரும் பணத்தை பத்­தி­ரப்­ப­டுத்தி வைத்­துக் கொள்­வான்; பள்­ளிக்கு நடந்தே செல்­வான். பின் அந்த பணத்தை என்ன செய்­வான்? புத்­த­கங்­க­ளாக வாங்­கிக் கொள்­வான். தான் மட்­டும் படித்து இன்­பு­றா­மல் தன் நண்­பர்­க­ளை­யும் படிக்க சொல்லி வற்­பு­றுத்­து­வான்.

இளை­ஞ­னா­ன­தும் வாசக சாலையை ஏற்­ப­டுத்தி பல புத்­த­கங்­களை படித்து வந்­த­வர்­தான் பின்­னா­ளில் குழந்­தை­க­ளுக்­கா­கப் பல பாடல்­கள், கதை­கள் எழு­திப் புகழ்­பெற்ற குழந்­தைக் கவி­ஞர் என்று அழைக்­கப்­பட்ட அழ. வள்­ளி­யப்பா. நமக்கு தெரி­யாத விஷ­யத்தை யார் சொன்­னா­லும் கேட்­கும் பக்­கு­வம் இருக்க வேண்­டும். ராஜா­வே­யா­னா­லும் தம்மை விட எளி­ய­வன் சொல்­லும் கருத்­தில் உண்மை இருந்­தால் வெட்­கப்­ப­டாது அதனை ஏற்க வேண்­டும்.

பல சிறந்த பண்­பு­க­ளைப் பல­ரது வாழ்க்கை வர­லா­று­களை நீங்­கள் படிக்­கும் போது தெரிந்து கொள்ள முடி­யும். அவை உங்­கள் வாழ்க்­கை­யில் பல விதங்­க­ளில் உத­வ­வும் செய்­யும்.

எழுதியவர் : (28-Feb-18, 2:33 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 51491

மேலே