குறுங்கவிதைகள்
குறுங்கவிதைகள்
நீ என்னை கடந்து செல்கையில்
என் பார்வை இறங்க மறுக்கிறது
உன் இரட்டை சடையிலிருந்து
அந்த நீலநிறச் சுடிதார்
நிச்சயமாய் அழகில்லை
நீ அணியும் முன்பு வரை
எந்தப் பூவிலும்
இப்படி ஒரு மென்மையில்லை
இன்னொருமுறை தொடு
ஒன்றும் புரியவில்லை
என்ன கேட்டாய் ?
ஒற்றைப் புருவ நெளிவில்