குறுங்கவிதைகள்

குறுங்கவிதைகள்

 நீ என்னை கடந்து செல்கையில்
என் பார்வை இறங்க மறுக்கிறது
உன் இரட்டை சடையிலிருந்து

 அந்த நீலநிறச் சுடிதார்
நிச்சயமாய் அழகில்லை
நீ அணியும் முன்பு வரை

 எந்தப் பூவிலும்
இப்படி ஒரு மென்மையில்லை
இன்னொருமுறை தொடு

 ஒன்றும் புரியவில்லை
என்ன கேட்டாய் ?
ஒற்றைப் புருவ நெளிவில்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (23-Mar-18, 10:12 pm)
பார்வை : 124

மேலே