ஈஸ்டர் திருநாள்

இயேசு...
முப்பத்து மூன்றாம் வயதில்
சிலுவையில் அறையப்பட்டார்...
உலகம் அழுதது...
மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்தார்...
உலகம் மகிழ்ந்தது...

மனிதனால் முடியாதது
தேவனால் கூடும்...
உலகத்தின்பால்
தேவனின் கிருபை
அளவிடற்கரியது...
தேவனின் அன்பில்
திளைத்தல் நமக்கு உரியது...

அன்பும் சமாதானமும்
என்றும் நிலவட்டும்...
தேவாலய மகிழ்ச்சி
இல்லங்களில் பிரதிபலிக்கட்டும்...

இயேசு சிலுவையில்
அறையப்பட்ட துன்ப நாளில்
உயிர்த்தெழுந்த இன்ப நாளில்
வாழ்ந்திருந்த மனிதர்கள்
இன்று இல்லை...
ஆனால் இனிய சாட்சி
சூரியன் இருக்கிறது...
இன்றைய ஞாயிறு
போற்றுதலுக்குரியது...

அனைவருக்கும்
ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்...
🙏👍🙋🏻‍♂😀🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (1-Apr-18, 9:57 am)
Tanglish : moonraam naal
பார்வை : 322

மேலே