வெண் ஆம்பல்
இதழ் விரித்த வெண்ணிற
ஆம்பல் ஒன்று
இதழ் மீதொரு சிரிப்பும்
இல்லாமல் மெளனம்
ஏகிய நாணத்தில் ரதத்தினில்
ஏரி நிற்க அவள்
மேனித் தழுவிய தென்றல்
எனை அவள்
திசைத் திருப்ப நிறுத்தம்
கண்டது எந்தன்
கண்ணும் ரதமும் தான்
மெல்ல நடையிட்டு
அவள் இறங்கிச் செல்ல
எந்தன் மனமும்
சொல்லாது பின் செல்ல
அதன் போக்கில்
மெய்யும் பின் தொடர
நானத்தில் என்
தலையும் கவிழ கணப்
பொழுதில் அவள்
கண்ணசைவு சொன்னது
எனை நெருங்காதே என....!