பிரிதல்

நீண்ட நாட்களுக்குப் பிறகு
நீளமாய்க் கிடைத்த
உன்னுடனான உரையாடல்....
நினைவில் தந்த ஞாபகங்கள் பல
ஒன்றாய்க் கழித்த நாட்களில் சில...
காதோரம் நீ பேசிய வார்த்தைகள்
கச்சிதமாய் கவியுரைக்க
கைவசமில்லை கன்னித்தமிழ் வார்த்தைகள்......
பேசிய வார்த்தைகளில்
பொய்யில்லை....-நான்
பேசாதிருந்தாலும்
அன்பில் ஒரு குறையில்லை....
பிரிதல் இல்லையென்றாலும்
சேர்தலும் இனி சாத்தியமில்லை.....!!!!!!

எழுதியவர் : Akila M (2-Apr-18, 7:28 am)
சேர்த்தது : அகிலாண்டேஸ்வரி
Tanglish : pirithal
பார்வை : 359

மேலே