என் தலைகன குற்றங்கள்
ஏதோ ஒன்று சொல்லிட ஏங்குகிறது மனது...
தாகத்திற்கும் குரல்வளைக்கும்
இடையில் சிக்கிகொண்ட
நீர் துளிபோல...
சொல்லித்தான் பார்க்கிறேனே...
மீசையை முறுக்கிவிடுகிறேன்
ஒன்றிரண்டு உயர்ந்தும்
தாழ்ந்தும் இருக்கிறது
மயிரைபோலவோ?
ஏதோவென வளர்த்து கொள்ளவும்
எவனோ குற்றமென பிதற்றினானென
மழித்துவிடவும்
என் எண்ணங்களை...
போற்றினால் போற்று
தூற்றினால் தூற்று ...
என் வழியில்
நீயுமோர் வழிபோக்கனே....
என் எல்லைகளை
நானே வரையறுக்கிறேன்
இன்று வரையில்...
செருக்கில்
இப்படியே பயணித்திடவோ?
என் உடன் சிறுபிள்ளையென
நாள் தொட்டு தொடர்ந்திடும்
உண்மை நட்பின்
உன் கருத்தில்லாமல்
காத தூரம் தாண்டிட
காலில்லாமல்...
நீ நவிழ்பது நன்மையென
தடுமாறிடும்
என் தலைகன குற்றங்கள் .. !