பிச்சை

ஈரைந்து விரல்களும் முழுதாய்
இருந்தும் அங்கம் தனில்
குறைகள் ஏதும் சிறிதும்
இல்லாது இறைவன் தந்த
உடலெனும் வரமதை வருந்தி
உழைத்து வரும் ஊதியம் தனில்
சுகம் காண்பதை விடுத்து உடல்
வளைத்து உழைக்காததற்கு வறுமை
அதைக் காரணம் காட்டி வருவோர்
போவோரிடம் எல்லாம் இரந்து
நிற்கையில் அவர் தரும்
வசைச் சொல்லுக்கு இசைவிலா
மரம் போல இருந்து பெரும்
யாசகத்தில் புசித்து உடல் வளர்த்து
வாழ்வது எல்லாம் ஓர் வாழ்கையா.....?

எழுதியவர் : விஷ்ணு (27-Apr-18, 8:18 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : pitchai
பார்வை : 41

மேலே