தர்மம்
என் முகம் காட்ட மறுத்த
கண்ணாடிக்கு என்ன மரியாதை?
புத்தம் புதிய உயிரோவியத்தை
குப்பையில் வீசுகிறாய்! ஏன்?
சிகரம் தொட்டவனை அண்ணாந்து பார்க்காமல்
குனிந்து கொண்டே போகிறாயே, நியாயமா?
உன் தகுதி இன்மையால்
என் தகுதியைப் புறந்தள்ளலாமா?
பூக்களைக் கசக்கி எறிந்த உன்னை
தர்மம் தான் தண்டிக்க வேண்டும்.