ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


குழந்தைகளில் சில
ஆள் வளருகின்றன
அறிவு வளரவில்லை !

உணரவில்லை மக்கள்
புற்றுநோய் வந்தபோதும்
நெகிழியின் தீங்கு !

சோதனையின் முடிவு
கசந்தது
இனிப்பு நோய் !

வெள்ளைக்காரன் தந்த
வெள்ளை நஞ்சு
சர்க்கரை ( சீனி )

பெரிய மனிதர்களையும்
மிகச்சிறியோராக்கும்
சினம் !

இருப்பிடம்
இதயமன்று மூளை
மனம் !

இதயமாற்று
சிகிச்சைக்குப் பின்னும்
நினைவில் அவள் !

கனிய வைக்கின்றனர்
ரசாயனத்தால்
கனிகளை!

மனிதனுக்கு
அழகு
மனிதநேயம் !

இல்லை வடிவம்
இல்லாவிடில் தொல்லை
அன்பு !

தகுதியற்றது என்றார்கள்
தகுதியாக்குவோம் நாம்
பெண்கள் வாழ !

வேரோடு பெயர்த்து நடுங்கள்
வெட்டாதீர்
மரங்களை !

முறையிடுவது யாரிடம்
காணவில்லை
கடவுள்களை !

எட்டுப் போடாவிட்டால்
உரிமை இல்லை அங்கு
எட்டைப்பற்றிப்பேசினால் சிறை !

உச்சநீதிமன்றம்
நெத்தியடி
ஆளுநர்களுக்கு !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Jul-18, 8:37 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 220

மேலே