காற்றோடு வந்தது மெல்லியபாட்டு
மலையோரத்து தென்றல் காற்று
மாலைநேரத்து வானத்தின் நிலவு
காற்றோடு வந்தது மெல்லியபாட்டு
கண்களில் வழிந்தது கண்ணீர் சொட்டு !
மலைப்புறத்து மங்கையின் பாட்டு
மனதை நெகழ்த்தியது மெட்டு
காதல் பிரிவின் சோகமோ
கடந்தகால குடும்பப் பூசலோ !
என்ன நினைத்தவள் பாடுகிறாள்
என்ன மொழியோ புரியவில்லை
என்ன துயரமோ தெரியவில்லை
என்நெஞ்சை விட்டு அகலவில்லை !
காற்றோடு வந்த மெல்லியபாட்டில்
கண்களில் வழிந்தது கண்ணீர்சொட்டு !