கவிஞன் ஆக்கினாள் என்னை


முகவரி
எழுதிக் கொண்டிருந்தேன்
பேனா கேட்டாள்
தந்தேன்
பின் சின்னப் புன்னகையுடன்
நன்றி சொல்லி
திருப்பித் தந்தாள்

நன்றி வேண்டாம் என்று
ஆங்கிலத்தில் மறுத்தேன்
மறுபடியும் புன்னகைத்தாள்
கை அசைத்து சென்றாள்

நான் மீண்டும்
முகவரி எழுதவில்லை
கவிதை எழுதத்
தொடங்கினேன்.
---க்வின் சாரலன்

எழுதியவர் : க்வின் சாரலன் (16-Aug-11, 4:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 331

மேலே