புத்தகம் ஒரு ஆவியின் கற்பனை

இந்தப் பாதையில்தான்
அந்தப்புத்தகம் இருந்தது
முகவரி தேடியபடி...
ஆக்கியோன் என்னுடன்
தேநீர் அருந்தியவண்ணம்
ஜே.ஜே.வின் அலமாரியில்
எழுதி ஒட்டிய வார்த்தைகளை
பற்றி பேசினார்...
புத்தகம் முன்னும் பின்னும்
வலை வீசி கொண்டிருந்தது.
பெண்களும் ஆண்களும்
விரையும் சாலையில்
அலைந்த புத்தகம் பின்
திணறத் தொடங்கியது.
ஆக்கியோன் மீது கிடந்த
ஒவ்வொரு வார்த்தையும்
நீந்திக் கிளம்பின
தேநீரிலிருந்து ஆவியாக...
இறுதியில் அவர்
இரு விரலில் பற்றிய
அந்தப் புத்தகத்துடன்
சாலையில் நழுவி
துணிக்கடையில் புகுந்தார்.
புத்தகத்தில் இருந்து
தவறி விழுந்த அந்த
இரண்டு கவிதைகளும்
மூன்று கடிதங்களும் பின்னர்
புளியமரத்தினடியில்
பேசிக்கொண்டிருந்தன
அவரைப்பற்றி நான் அறிந்ததை.
நீங்கள் கூட பார்க்கலாம்
ஆக்கியோனை என்றாவது...
கூட்டத்தில் தனித்தும்
தனித்த பொழுதில்
கூட்டப் பிரசங்கமாகவும்...
அந்தப்புத்தகத்தில் தவறி விழுந்த
ஒரு சொல்லாய் நீங்கள்
இருந்திருந்தால்...

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Jul-18, 7:37 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 51

மேலே