ஏழ விவசாயி

அன்னாந்து பாத்துப் பாத்து
ஆறேழு வருசாச்சி!
இன்னும் காத்திருக்கோம்,
ஈரம் கண்ணில் கூடயில்ல.
உண்ண சோறுண்டா?
ஊத்தெடுக்கும் நீருண்டா?
எட்டுவழிச் சாலயில,
ஏத்தந்தான் இங்குண்டா?
ஐயா! ஆட்சியரே!
ஒய்யாரக் கோட்டையரே!
ஓலம் இடுகின்றோம்!
உங்காதில் கேட்கலயா?
பயணம் வெரசாகப்
பயிர்நிலத்த பரிக்காதீக!
வயல வளச்சிப்புட்டு
வளர்ச்சினு தான் மழுப்பாதீக!
சயிரன் வச்ச வண்டி,
சர்க்காரு ஓட்டும் வண்டி,
நீட்ட டேப்பெடுத்து
நிலம் பிரிக்க வந்துருக்கே!
பயிரு வச்ச நிலம்!
புல்டோசர் ஏறயிலே,
வயிறு எரியுதய்யா!
வயிட் கோட்டுப் போட்டவரே!
ஏழ விவசாயி
ஏதேதோ உளறிப்புட்டேன்!
என்னையும் துரோகியினு
சிறக்குள்ள அடச்சிடுங்க!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (22-Jul-18, 4:32 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 6391

மேலே