காதல்

மேல் மாடி படுக்கை அறையில் நான்
திறந்திருந்த ஜன்னல்
என்னவன் நினைப்பிலேயே தூங்கிவிட்டேன்
யாரோ தட்டி எழுப்புவதுபோல் .....................
எழுந்து உடகார்ந்தேன்
முழு நிலா என்முன்னால்
உன் விஷமம்தானா நிலவே
புரிந்துவிட, மீண்டும் போர்வைக்குள் நான்
தூங்க முயற்சி ......................
அரைகுறை தூக்கம்
மீண்டும் யாரோ தட்டி எழுப்ப
அரண்டெழுந்தேன், என்னவன்தான் அழைக்கிறானோ
முற்றம் வந்து நின்றேன்
என் முன்னே என்னவன்
இரவின் இருளில்
நிலவென அவன் முகம்
என்ன இப்படி ஒரு வருகை
என்றேன் ஊமை மொழியிலே
உனைப் பார்க்காமல் இருக்க முடியலையே
என்றான் அவனும் சைகையிலேயே
இருவரும் புரிந்துகொண்டோம்
இப்போது வந்து என்னை அணைத்துக்கொண்டான்
இன்னும் மீதி மேடையில் நானும் நீயும்
இணைந்தபின்னே பொறுத்திரு அதுவரை
என்றேன் களவியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து
பிரிந்தோம், பிரிவில் வருத்தம்
காதலுக்கும் வரம்புண்டு ..
இருவரும் அறிவோம்...............
கூடி வரும் நாளைத் தேடி
நானும், அவனும்
திரும்பிவிட்டேன் படுக்கை அறைக்கு
நிலவு இன்னும் அங்கேயே ............
என்ன என்று வினவுவதுபோல்
போக்கிரி நிலவே போய் வா
நாளை சொல்வேன் ..................
தூக்கம் தழுவ ................கனவுலகில் நான்

..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-18, 1:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே