தமிழை மீட்டெடுப்போம் வாரீர்

தமிழே உன்னுடைய இனிமையைக் கண்டு!

நாளும் செய்யப்போகிறேன் உனக்கு தொண்டு!

நீ சுவை மிகுந்த கற்கண்டு!

இனி தினம்தோறும் அதனை உண்டு!

நானடையப்போகும் இன்பமோ பல உண்டு!

நீயோ ஓர் அழகிய பூச்செண்டு!

நானோ தேன் நுகரும் வண்டு!

இத்தனைநாள் அடைந்திருந்தேன் பிறமொழிக் கூண்டு!

இனிநான் சுதந்திரமாய் திரியும் தமிழ்வாண்டு!

பிறமொழிக் கலப்பிலிருந்து நாம் மீண்டு!

சரித்திரம் படைப்போம் புதுக்கோலம் பூண்டு!

எழுதியவர் : தமிழ்ப் பித்தன் (18-Sep-18, 9:34 am)
சேர்த்தது : நந்து தமிழன்
பார்வை : 712

மேலே