தமிழ் அறிகிறேன்

யாதும் அறிந்திலேன் நான்
தீஞ்சுவை சொட்டும் தேனும் அறிந்திலன்
நன்செய் நிலநெல்லும் அறிந்திலன்
வையை நாட சென்ற மண்ணும் அறிந்திலன்
பொன்னும் பொருளும் பொருள் நிகரா
மடந்தையும் அறிந்திலேன் நான்
வந்தியதோர் வாழ வைத்த
வங்கக்கடல் சேரா குமரியும் அறிந்திலேன்
ஏனோ யாதும் அறியாததில்
தமிழும் அறிந்திடுவேனோ
அதனின் அருளும் அறிந்திடுவேனோ
புரியாமல் தவிக்கிறேன் புது மொழி
கற்றலில்.....

எழுதியவர் : ப்ரஹன் (18-Sep-18, 1:58 am)
சேர்த்தது : ப்ரஹன்
Tanglish : thamizh ARIKIREN
பார்வை : 217

மேலே