காத்திருப்பு
கருவேலமாய் காத்திருக்கிறேன்- உன்
ஒற்றை நினைவே போதும்
தேயா பிறையாய் வாழ்கிறேன்
அகல் விளக்கின் ஒளியில்
நீல வானில் நீந்தாமல்
தூண்டில் இரையாகிறேன்-உன்
வேல்விழிகள் திரும்பாத் தொலைவில்
வாலில்லா காற்றாடியாய் ஊசலாடுகிறேன்
உயிர் பிரிகின்ற வலிக்கு
உணர்வில்லாமல் எரிதழலாகிறேன்-என்
வடியாத கண்ணீர்க் கடலிலும்
நுரையாக அலைகள் ஒதுங்கியதுவோ
வெற்றிடத்தில் வேர் வளர்க்கிறேன்
கூட்டுப்புழு வாழ்க்கையில் கொஞ்சம்
கானல்கள் கழியட்டும்-என்
பிருந்தாவன பட்டுப்பூச்சியே சிறகடித்து வா...
ரா.அன்பரசு,
ஆங்கிலஆசிரியர்,
கோவை