வெளி நாட்டில் வாழும் இந்தியனின் ஏக்கம்

என் தாயின் கருவில் உருவாகி
விருட்சமாய் வளர்ந்து -- பின்
பறவையாய் என் தாய் திருநாட்டில்
சுற்றி திரிந்தேனே! - ஆனால்
இன்றோ! என் தேவைகள்
பெருகியதால் கருவுற்றிருக்கும்
மனைவி - பிள்ளைகளையும்
எனக்கு உருகொடுத்த
தாய் தந்தையையும் விடுத்து -
அந்நிய தேசத்தில் பயணம்
செய்து அங்கே ஒரு கூண்டு
கிளியாக மாறிவிட்டேனே!
இங்கு நான்படும் இன்னல்களை
மறைத்து என்னை போலியாக
சிரிக்க வைக்கிறாயே!
என் தாய் தந்தையின்
அன்பையும், என் மனைவியின்
பாசத்தையும், என்
குழந்தைகளின் மழலை
பேட்சினையும் காணா!
குருடன் ஆகிவிட்டேனே!
என்று வரும் என்மேல்
கருணை உனக்கு! இறைவா!
இப்படிக்கு,
வெளி நாட்டில் வாழும்
இந்தியனின் ஏக்கம்.

எழுதியவர் : மோகன் (5-Dec-18, 4:50 pm)
சேர்த்தது : மோகன்
பார்வை : 64

மேலே