காதலும் காற்றும்

கண்ணுக்கு புலனாவதில்லைக் காற்று
ஆனால் அது அணைக்கும் போது பூந்தென்றல்
கோபத்தால் சீறும்போதோ அதுவே மாறும் புயலாய்
காதலும் அப்படித்தான், கண்ணுக்கு தெரியாது
காதலில் கட்டுண்டோர் அவ்வணைப்பில் ஓர்
மலர்போல் மென்மையை அனுபவிப்பார் அத்தொட்ட
தென்றல் தரும் இன்பம் கண்டு, ஆயின் காதலில்
சந்தேகம் என்னும் புற்று தாக்க அது மனதை
புயல்போல் வந்து தாக்கும் உடைந்த பாய்மரக்கப்பல்
போல் காதலர் உள்ளம் சிதிலமடைய.
கரை காணமுடியாது அவ்வுள்ளங்கள் தத்தளிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Dec-18, 2:55 pm)
Tanglish : kaathalum kaatrum
பார்வை : 312

மேலே