காதல்

எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன
முதல் முதலாய் நாங்கள் சிந்திக்கும் முன்னே
கண்ணும் கண்ணும் கலந்து ஏதோ காதல் மொழியில்
பேசினவோ .......... அவள் கண்கள் சிரிக்கவும்
என் மௌனம் கலைந்தது மனதில் ஓர் தைரியம் இப்போது
அதோ , அந்த கன்னியை நான் நெருங்கினேன்
'நான் உன்னை நேசிக்கின்றேன்' என்று சொல்ல நினைக்கையில்
அந்த கன்னியே என்னை நோக்கி' என் மனம் உன்னில்
உன் மனதில் கலந்துவிட்டதே நீ அறியாயோ' என்றாள்
உன் கண்கள் என்னைப்பார்த்து சிரித்தபோதே என்றாள்
இது என்ன நான் சொல்ல நினைத்ததை இவள் சொல்லிவிட்டாளே
என்று நினைத்தேன் , எப்படி இருந்தால் என்ன
எனக்கு காதலி கிடைத்தால், அவளுக்கு காதலன்
எங்களுக்கு , காதல்...... ஆம் காதல் கிடைத்தது
வெறும் பார்வையின் மோதலில் , பார்வைகள்
பகிர்ந்துகொண்ட , உள்ளம் கூட அப்போது உணராத
உறவு ..... வந்து சேர்ந்தது
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் தந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Dec-18, 4:54 pm)
Tanglish : kaadhal
பார்வை : 308

மேலே