நகைசுவை கவிதையாய் முதன் முறையாய்
நண்பர்கள் கூட்டம் ஒன்று சேர்ந்தால்
நகைசுவைக்கு பஞ்சம் வந்ததில்லை
முதலாம் நண்பன் தொடங்கினான்
மருத்துவமனையில் காத்திருந்தேன்
மருத்துவருகாக காத்திருக்கையில்
உறங்கியும் விட்டேன் கனவில் எமன்
வந்திருக்கிறேன் என்றான்
நண்பனோ நல்ல வேளை
மருத்துவர்தான் வந்து விட்டாரோ
என்று பயந்து விட்டேன் என்றான்
ஈ ஆடவில்லை எமனின் முகத்தில்
என்று சொல்லி முடிக்க அடுத்த நண்பன்
இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில்
தன் ஆட்டோவை நிறுத்தி விட்டு
ஒரு சக்கரத்தை வேகமாக கழட்டி
கொண்டிருந்தான் விளக்கம் புரியாமல்
நான் கேட்க்க இது இரு சக்கர வாகனம்
நிறுத்துமிடம் அதனால் என்றான்
அவன் புத்தியில் மெய் சிலிர்த்தேன்
மூன்றாமவன் தன் மனைவிக்கு செவி
கோளாறு இருக்கமோ என்று மருத்துவரிடம்
கூட்டி செல்ல அவரோ எத்தனை தூரத்தில்
அழைத்தாள் கேட்கிறது காது என்று
சோதித்து வா என்றார் அவனும்
அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில்
வீடு வாசலில் அவன் மனைவி ஒரு
20 அடி தூரம் இருக்கும் அங்கே இருந்து
கொண்டே இரவு உணவு என்ன என்று
கேட்க பதில் இல்லை தூரம்
குறைத்து கொண்டே பலமுறை கேட்க்க
அப்பவும் பதில் இல்லை
அருகில் வந்து அதே கேள்வி திரும்பி கேட்க்க
மனைவி சொன்னாள் நான்காவது தடவையா
சொல்கிறேன் சப்பாத்தி குருமா என்றாள்
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க
நகைசுவை நம் சொத்து