காதலென்றால் என்ன ..?
தெரிந்தே தொலைந்த என் இதயம் ..........,
தெரியாமல் வந்த காதல் ..........,
தூக்கத்தை கெடுத்த கனவு ..
பதைமாறியே செல்லும் என் கால்கள்; .....
நானே தனியாய் சிரிப்பது ........
பார்ப்பது எல்லாம் அழகாய் .........
நண்பர்களுடன் இருந்த நாட்கள் மறக்குது ..........
பேனாவை எடுத்தால்
என்னை அறியாமல் எழுதுகிறேன் உன் பெயரை .....
என்னையும் நான் மறக்கிறேன்
என்னை அறியாமலேயே ..............
இந்த மாற்றம் அனைத்தும் உன்னை, உன் கண்ணை பார்த்த பின்புதான் ..........,
கேட்டல் சொல்கிறார்கள் காதலென்று .......
தேவதையே சொல்லடி காதலின் அறிகுறி ...
காதலென்றால் என்ன ...............?