பாலையிலே ஓர் மரங்கொத்தி

பாலையில் ஓர் பட்டமரம்
வந்தமர்ந்து ஓர் மரங்கொத்தி
பட்டமரத்தை கொத்தி கொத்தி
பெரும் சப்தம் எழுப்பியது -அப்படி
என்ன கண்டது அப்பறவை அம்மரத்தில்
பட்டமரத்தில் தான் தேடி வந்த
உணவினைக் கண்டு உண்டு
பெரு மகிழ்ச்சியில் திளைத்தது மரங்கொத்தி
மரத்தின் கீழ் நிழல்கூட கிடைக்காமல்
தாகத்திற்கு நீர் தேடியது என்
வறண்ட கண்கள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Feb-19, 8:52 pm)
பார்வை : 172

மேலே