தூது மடல்

அமைதியான பொழுதினிலே
ஆர்ப்பரித்த பெண்குயிலே -என்
இளமை பருவத்தினை -உன் முன்
ஈகையுற செய்தவளே -என்
உள்ளக்கதவினை உடைத்த
ஊமை பார்வையவளே
எந்தன் நெஞ்சமதை திருடிவிட்டு
ஏளனம் செய்யும் உந்தன் பார்வை
ஐயம் கொள்ளச்செய்யுதடி
ஒருமையில் கழித்த பொழுதுகளை -உன் பின்னே
ஓட்டம்முற செய்த பெண்கவியே
உந்தன் ஒத்த பார்வவை விழுகையில்
உயிரே கரையுதடி உன்
உதடு மலர்கையிலே -என் இதயக்கதவு
உயிர்குதடி என் காதல்
உரம்பெற சொல்லிடு உன்
உள்ளத்தினின் மெய்ப்பொருளை

எழுதியவர் : (15-Feb-19, 12:50 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : thootu madal
பார்வை : 82

மேலே