நேச ராஜன்
கண்களால் காண இயலா
சுகந்த மணம் பூக்களினுடையது...
தன்னுள் உள்ளடக்கிய வெண்ணெய்
வெளிக்காட்டா பண்பு
பசும் பாலினுடையது...
செய்த சாதனைகள்
வெளிச் சொல்லா குணம்
நண்பன் பால் நேசனுடையது...
அன்பால் நேசத்தால்
ராஜன் ஆக
வாழும் சென்னை வாழ்
நாஞ்சில் நாடன்... நண்பன்...
பால் நேச ராஜன்...
வாழ்க பல்லாண்டு...
வளங்கள் பல பெற்று...
பூக்கள் பூந்தோட்டங்களின்
ரசிகன் பால் நேசன் என
இவன் காலை வாழ்த்துக்கள்
சொல்லும்... கட்டுமான அறிவில்
கரை கண்டவன் என இவன்
கட்டிய கட்டிடங்கள் சொல்லும்...
வசந்தங்கள் உன்னோடு
வளங்கள் எல்லாம் உன்னோடு
வாழ்க பல்லாண்டு என
என் வாழ்த்துக்கள் சொல்லும்...
நண்பன் பால் நேச ராஜனுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...