என் இதயம் பழுதாகி

என் மனதில் துயராகி
என் இதயம் பழுதாகி
எத்தொழிலும் வெறுப்பாகி
எந்நாளும் குழப்பமாகி
இமையெல்லாம் எரிச்சலாகி
இயலா நிலையிலே எந்நிலை இருத்தலாகி
எவ்வித பாடு எல்லாம்
ஈர்த்துக் கொண்ட நீராகி
அல்லல் படுகின்றேன்
அன்பான மாந்தர்களே
ஆரோக்கியத்திலும் குறைவில்லை
ஆழ் மனதிலும் குறைவில்லை
ஆனாலும் துன்பமது எனை விட்டு விலகவில்லை
ஆழ்ந்து நான் யோசித்ததில்
அறமோடு வாழ்வதிலே அனைத்தும் சோதனை என்று
துன்பத்தை தூர விரட்ட
துணிந்து நான் இறங்கிவிட்டேன்
அன்பும் அறநெறியும் அணிகலனாய் பயன்படுத்த .
- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (5-Mar-19, 1:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 234

மேலே